பாபநாசம் பட ஸ்டைலில்.. க.காதலனுடன் சேர்ந்து.. கணவரை கொன்று வீட்டிற்குள் புதைத்த பெண்.. !

Jul 22, 2025,01:47 PM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.


தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து குடியா சௌஹான் என்ற பெண், தனது கணவரை கொன்று வீட்டின் உள்ளேயே புதைத்துள்ளார். குடியாவின் கணவரான விஜய் சௌஹான் மனைவியின் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


கொலையை மறைக்க, அந்த பெண் புதைத்த இடத்தில் டைல்ஸ் ஒட்ட வைத்துள்ளார். இந்த கொடூரமான சம்பவத்தை செய்த பிறகு, குடியாவும், அவருடைய கள்ளக்காதலன் மோனு விஸ்வகர்மாவும் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.




இந்த கொலை நலாசோபரா கிழக்கு கங்காடிப்படா பகுதியில் உள்ள சாய் வெல்ஃபேர் சொசைட்டி சாவல் பகுதியில் நடந்துள்ளது. 

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த கொலை நடந்துள்ளது. குடியாவும், மோனுவும் விஜய்யின் உடலை வீட்டிற்குள்ளேயே ஒரு மறைவான இடத்தில் புதைத்தனர். யாரும் கண்டுபிடிக்காதபடி, அந்த இடத்தின் மேல் டைல்ஸ் ஒட்டப்பட்டது. 


இதில் என்ன கொடுமை என்றால் தனது மைத்துனரை வைத்து அதாவது விஜய்யின் தம்பியிடம் சொல்லித்தான் டைல்ஸ் ஒட்டியுள்ளார். அந்த இடத்தில் தான் தனது சகோதரர் புதைக்கப்பட்டுள்ளார் என்று தெரியாமல் டைல்ஸை ஒட்டியுள்ளார் அவரது தம்பி. இந்த சம்பவம் நடக்கும்போது, தம்பதியரின் எட்டு வயது மகன் அதே வீட்டில் இருந்துள்ளான்.


விஜய் காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தபோதுதான், போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது. குடியாவுக்கும், மோனுவுக்கும் இடையே நடந்த சமூக வலைதள, வாட்ஸ் ஆப் உரையாடல்களை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த உரையாடல்களை வைத்து விசாரித்ததில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆனால், போலீசார் அவர்களை கைது செய்வதற்குள் தப்பி ஓடிவிட்டனர்.


பெல்ஹார் போலீசார் குடியாவையும், மோனுவையும் தேடி வருகின்றனர். விஜய்யின் உடலை தோண்டி எடுத்து, தடயவியல் பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

news

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?

news

இந்திரஜித்!

news

ஒரு மிடறு!

news

Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!

news

அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்

அதிகம் பார்க்கும் செய்திகள்