டெல்லி: திரினமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், இன்று நடந்த நாடாளுமன்ற எத்திக்ஸ் கமிட்டிக் கூட்டத்திலிருந்து ஆவேசமாக வெளிநடப்பு செய்தனர். அசிங்கமான முறையில் கேள்விகள் கேட்டதாக மஹுவா மொய்த்ரா கோபமாக கூறினார்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக புகார் வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த புகார் குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உரிமைக் குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மொய்த்ராவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதில் கலந்து கொண்டனர். ஆனால்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகையில், தனிப்பட்ட முறையிலும், முறையற்ற வகையிலும் மொய்த்ராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறினர். மொய்த்ரா கூறுகையில், என்ன வகையான மீட்டிங் இது.. அசிங்கமான கேள்விகளாக கேட்கிறார்கள் என்று கடும் கோபத்துடனும், ஆவேசத்துடனும் கூறினார்.

மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் உத்தம் குமார் ரெட்டி, டேனிஷ் அலி உள்ளிட்டோர் பேசினர்.
தர்ஷன் ஹிரநந்தானி என்ற தொழிலதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான லாகின் விவரத்தைக் கொடுத்ததாக மொய்த்ரா மீது புகார் உள்ளது. அந்தப் புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}