டெல்லி: திரினமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், இன்று நடந்த நாடாளுமன்ற எத்திக்ஸ் கமிட்டிக் கூட்டத்திலிருந்து ஆவேசமாக வெளிநடப்பு செய்தனர். அசிங்கமான முறையில் கேள்விகள் கேட்டதாக மஹுவா மொய்த்ரா கோபமாக கூறினார்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக புகார் வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த புகார் குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உரிமைக் குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மொய்த்ராவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதில் கலந்து கொண்டனர். ஆனால்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகையில், தனிப்பட்ட முறையிலும், முறையற்ற வகையிலும் மொய்த்ராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறினர். மொய்த்ரா கூறுகையில், என்ன வகையான மீட்டிங் இது.. அசிங்கமான கேள்விகளாக கேட்கிறார்கள் என்று கடும் கோபத்துடனும், ஆவேசத்துடனும் கூறினார்.
மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் உத்தம் குமார் ரெட்டி, டேனிஷ் அலி உள்ளிட்டோர் பேசினர்.
தர்ஷன் ஹிரநந்தானி என்ற தொழிலதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான லாகின் விவரத்தைக் கொடுத்ததாக மொய்த்ரா மீது புகார் உள்ளது. அந்தப் புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}