அதிரடி எம்.பி. மஹுவா மொய்த்ரா திடீர் திருமணம்.. முன்னாள் பிஜேடி எம்.பியை ரகசியமாக மணந்தார்!

Jun 05, 2025,09:26 PM IST

கொல்கத்தா: திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவும், பிஜூ ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவும் ஜெர்மனியில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மிகவும் ரகசியமாக இந்தத் திருமணம் நடந்தேறியுள்ளது.


திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. அதிரடியாக பேசக் கூடியவர். நாடாளுமன்றத்தை தனது அனல் கக்கும் பேச்சால் அதிர வைப்பவர்.  பினாகி மிஸ்ரா பிஜூ ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவர்.  இருவரும் ஜெர்மனியில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். மே 30ம் தேதி இந்தத் திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் ஜோடியாக காட்சி அளிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.


இந்தத் திருமணம் குறித்து பலருக்கும் தெரியவில்லை. புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்துதான் இந்தத் திருமணம் குறித்தே தெரிய வந்துள்ளது. மஹுவா மொய்த்ராவுக்கு 50 வயதாகிறது. 




உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பினாகி மிஸ்ரா, 1996 இல் பூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதன்முதலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.

1996 க்குப் பிறகு 10 வருட காலம் மிஸ்ரா அதே தொகுதியிலிருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர் அவர் பிஜு ஜனதா தளம் (BJD) சார்பில் 2009 முதல் 2019 வரை மூன்று முறை எம்.பி.யாகப் பணியாற்றினார். மிஸ்ராவுக்கு தனது முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 


மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடிய எம்.பி.க்களில் ஒருவரான மஹூவா மொய்த்ரா, முன்னர் டேனிஷ் நிதியாளர் லார்ஸ் ப்ரோர்சனை மணந்தார், பின்னர் அவரை விவாகரத்து செய்தார். வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராயுடன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உறவில் இருந்தார், பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்தார். அவரை "கைவிடப்பட்ட முன்னாள் காதலன்" என்று விவரித்தார்.


முதல் முறை எம்.பியாக இருந்தபோது, கௌதம் அதானியின் வணிகப் போட்டியாளர்களில் ஒருவரால் தூண்டப்பட்டு அவருக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார் மஹூவா. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று 2வது முறையாக எம்.பி. ஆனார் என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்