கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரினாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் இன்று தனது கட்சி சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் அதிரடியாக அறிவித்தார் மேற்கு வங்க முதல்வரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
கொல்கத்தாவில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் 42 வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் மமதா பானர்ஜி.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி போட்டியிடுகிறார். கிரிக்கெட் இரட்டையர்களான பதான் சகோதரர்களில் மூத்தவர் யூசுப். இளையர் இர்பான் பதான் என்பது நினைவிருக்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு சகோதரர்களும் ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

கடந்த நாடாளுமன்றத்தில் அதிரடி எம்.பியாக வலம் வந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாகவும், நாடாளுமன்ற இமெயில் வசதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளார் மமதா பானர்ஜி. மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடவுள்ளார்.
மமதாவின் தம்பி மகன் அபிஷேக் பானர்ஜிக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் டயமன்ட் ஹார்பர் தொகுதியல் போட்டியிடவுள்ளார். அசன்சோல் தொகுதியில் நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி.
இளம் தலைவரான தேபங்ஷு பட்டசார்யாவுக்கு தம்லுக் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரபலத்தைத் தேடிக் கொடுத்த கேலோ ஹோபே பிரச்சாரத்தை வடிவமைத்தவர் இவர்தான்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}