கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரினாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் இன்று தனது கட்சி சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் அதிரடியாக அறிவித்தார் மேற்கு வங்க முதல்வரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
கொல்கத்தாவில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் 42 வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் மமதா பானர்ஜி.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி போட்டியிடுகிறார். கிரிக்கெட் இரட்டையர்களான பதான் சகோதரர்களில் மூத்தவர் யூசுப். இளையர் இர்பான் பதான் என்பது நினைவிருக்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு சகோதரர்களும் ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

கடந்த நாடாளுமன்றத்தில் அதிரடி எம்.பியாக வலம் வந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாகவும், நாடாளுமன்ற இமெயில் வசதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளார் மமதா பானர்ஜி. மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடவுள்ளார்.
மமதாவின் தம்பி மகன் அபிஷேக் பானர்ஜிக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் டயமன்ட் ஹார்பர் தொகுதியல் போட்டியிடவுள்ளார். அசன்சோல் தொகுதியில் நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி.
இளம் தலைவரான தேபங்ஷு பட்டசார்யாவுக்கு தம்லுக் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரபலத்தைத் தேடிக் கொடுத்த கேலோ ஹோபே பிரச்சாரத்தை வடிவமைத்தவர் இவர்தான்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}