சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், புதிய கட்சியான தவெகவிற்கு விசில் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு ஏற்கனவே நிலையான சின்னங்கள் உள்ளன. தேர்தல் தேதி பிப்ரவரியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தலைமையில் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}