33 வயது நடிகை தற்கொலை.. கேரளாவில் பரபரப்பு!

Sep 01, 2023,01:42 PM IST
திருவனந்தபுரம்:  மலையாள நடிகை அபர்ணா நாயர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை மூலம் தனது உயிரை முடித்துக் கொண்டதாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள டிவி நடிகை அபர்ணா நாயர். சினிமாவிலும் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்தார். 33 வயதான அவர் திருவனந்தபுரத்தில் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கைக்கு முரணான மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அபர்ணா நாயர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சந்தனமழா, ஆத்மசக்தி, மைதிலி வீண்டும் வரும் உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களில் அபர்ணா நாயர் நடித்துள்ளார். மலையாள டிவி உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். நைவேத்யம் என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் நடித்துள்ளார். மல்லுசிங், தட்டத்தின் மறயத்து, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்