33 வயது நடிகை தற்கொலை.. கேரளாவில் பரபரப்பு!

Sep 01, 2023,01:42 PM IST
திருவனந்தபுரம்:  மலையாள நடிகை அபர்ணா நாயர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை மூலம் தனது உயிரை முடித்துக் கொண்டதாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள டிவி நடிகை அபர்ணா நாயர். சினிமாவிலும் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்தார். 33 வயதான அவர் திருவனந்தபுரத்தில் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கைக்கு முரணான மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அபர்ணா நாயர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சந்தனமழா, ஆத்மசக்தி, மைதிலி வீண்டும் வரும் உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களில் அபர்ணா நாயர் நடித்துள்ளார். மலையாள டிவி உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். நைவேத்யம் என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் நடித்துள்ளார். மல்லுசிங், தட்டத்தின் மறயத்து, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்