33 வயது நடிகை தற்கொலை.. கேரளாவில் பரபரப்பு!

Sep 01, 2023,01:42 PM IST
திருவனந்தபுரம்:  மலையாள நடிகை அபர்ணா நாயர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை மூலம் தனது உயிரை முடித்துக் கொண்டதாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள டிவி நடிகை அபர்ணா நாயர். சினிமாவிலும் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்தார். 33 வயதான அவர் திருவனந்தபுரத்தில் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கைக்கு முரணான மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அபர்ணா நாயர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சந்தனமழா, ஆத்மசக்தி, மைதிலி வீண்டும் வரும் உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களில் அபர்ணா நாயர் நடித்துள்ளார். மலையாள டிவி உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். நைவேத்யம் என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் நடித்துள்ளார். மல்லுசிங், தட்டத்தின் மறயத்து, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்