சிங்கப்பூர்: மலேசியாவைச் சேர்ந்த 45 வயது தமிழர் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, 74 வயது பெண்ணின் கால் நசுங்கியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த தமிழரின் பெயர் குணசீலன் சுப்ரமணியம். இவர் சிங்கப்பூரில் பஸ் டிரைவராக இருக்கிறார். சம்பவத்தன்று பஸ்ஸை ஒரு நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு பஸ்ஸை எடுத்துள்ளார். அப்போது 74 வயதான துமினா சபி என்ற பெண் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். பஸ் வேகமாக எடுக்கப்பட்டதால் தடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவரது கால் பலத்த சேதமடைந்தது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு கால்களிலும் முழங்காலுக்குக் மேலே பலமாக சேதமடைந்திருந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்ட்ட சுப்ரமணியத்தின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் உரிமம் பெறவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு அவர் சிங்கப்பூரில் எந்த வாகனத்தையும் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு 3 வார சிறைத் தண்டையும் வழங்கப்பட்டுள்ளது. பணியின்போது அலட்சியமாக இருந்ததாகவும், செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}