மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் செல்லக்கூடாது என காரை தடுத்து நிறுத்திய செக்யூரிட்டி மீது இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சரமாரியாக தாக்கிய வழக்கில், தனிப்படை போலீசார் 3 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகே ஐந்து ரதம் பகுதியில் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சொகுசு காரில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் வளாகத்திற்குள் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி, இது நோ பார்க்கிங், இந்தப் பகுதிகளில் வாகனங்கள் செல்லக்கூடாது என காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால் மீறி தாங்கள் சென்னைக்கு செல்வதாக கூறி அந்த சொகுசுக்கார் நோ பார்க்கிங் பகுதிக்குள் நிற்காமல் செல்ல முயன்றது.. இதனைத் தொடர்ந்து அந்த செக்யூரிட்டி காரை தடுத்து நிறுத்தி கார் உள்ளே போகக்கூடாது என கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த இரண்டு பெண்கள் காரில் இருந்து உடனடியாக இறங்கி செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பெண் ஒருவர் செக்யூரிட்டி வைத்திருந்த கம்பை பிடுங்கி, செக்யூரிட்டியை கடுமையாக தாக்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
செக்யூரிட்டியை தாக்கிய பெண்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மாமல்லபுரம் போலீசார் செக்யூரிட்டி தாக்கிய பெண்கள் உட்பட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வீடியோவில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் காரில் வந்தவர்கள் சென்னை அருகே உள்ள முடிச்சூரைச் சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தினர் என்று தெரிய வந்தது. இதையடுத்து பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}