ரூ. 3.51 கோடியில் புனரமைக்கப்பட்ட மாமல்லபுரம் ஸ்ரீ சயன பெருமாள் திருக்கோவில்.. பிப்.1ல் குடமுழுக்கு

Jan 26, 2024,02:42 PM IST
சென்னை: தனியார் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட மாமல்லபுரம் ஸ்ரீ சயன பெருமாள் திருக்கோவிலில் பிப்ரவரி 1ம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ளது அருள்மிகு ஸ்தல சயனப்பெருமாள் திருக்கோயில். இது இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலாகும். 

ஸ்ரீமன் நாராயணன் தனது திருப்பாற்கடல் என்னும் பாம்பணையைத் துறந்து அர்ச்சாவதார நிலையில் தரையில் ஸ்தல சயனமாய் கிடந்த திருக்கோலத்தில் காட்சி தரும் திவ்ய தேசம் தான் இந்தத் திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரம். அந்த மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில்
பதினான்காம் நூற்றாண்டில் பராங்குச மன்னனால் கட்டப்பட்டது. 



இந்தக் கோயில் தென்னிந்திய கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக  விளங்குகிறது. இங்குள்ள கருங்கல் தூண்கள் கலை வடிவத்திற்குச் சான்றுகள். இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்ய தேசமாக மதிக்கப்படுகிறது. பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இது கருதப்படுகிறது.12 ஆழ்வார்களுக்கும் இங்கே தனித்தனி சன்னிதிகள் உண்டு. பூதத்தாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் புரனமைப்பு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதையடுத்து ஜி.கே ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனம் இந்த பணியை ஏற்றுக் கொண்டது. அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர். ஜி குமார் ரூ. 3. 51 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு  பணிகளைச் செய்துள்ளார்.  ஆலயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்பிரகாரங்கள் புதுப்பிக்கப்பட்டு இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

இதையடுத்து வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி வியாழக்கிழமை, தை மாதம் 18ம் தேதி, காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது. விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், திரு தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.



பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், இந்து சமய அறநிலைத்துறை முன்னணி அலுவலர்களும், ஆலய அறங்காவலர் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.

ஆலயத்தில் உற்சவமூர்த்தி ஸ்ரீ ஸ்தல சயனப் பெருமாள், ஸ்ரீ நில மங்கைத் தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதத்தாழ்வார், விமானங்கள் ,ராஜகோபுரம், த்வஜஸ்தம்பம்,  கருடாழ்வார், அனுமார் மற்றும் பரிவார சன்னிதிகளுக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறும். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு இந்த ஆலயத்தை முறைப்படி எதிர்காலத்தின் தொடர் பராமரிப்புக்காக இந்து சமய அறநிலைத்துறையிடம் ஆலயத்தைப் புனரமைப்பு செய்த நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஜி. குமார் ஒப்படைக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்