Australia Vs Sri Lanka: "முதுகுப்பிடிப்புடன் ஆடினேன்.. சிறப்பாக பவுல் செய்தது மகிழ்ச்சி".. ஆடம் ஜம்ப

Oct 17, 2023,11:37 AM IST

லக்னோ: ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான உலகக் கோப்பைப் போட்டியில், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, தான் முதுகுப் பிடிப்புடன் விளையாடியதாக கூறியுள்ளார்.


ஆஸ்திரேலியா - இலங்கை இடையே நேற்று லக்னோவில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்ததால் இந்தப் போட்டியில் வெல்வது அந்த அணிக்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் அதன் பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் ஒரு வெறி இருந்தது.




முதலில் பவுலிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கை கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய  அவர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது அபாரமான பந்து வீச்சு காரணமாக இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


8 ஓவர்கள் வீசிய அவர் 1 மெய்டன் ஓவர் போட்டு, 47 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் காரணமாக, ஆஸ்திரேலியாவின் சாம்பியன் கனவு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.


இந்த நிலையில் ஆடம் ஜம்பா, முதுகுப்பிடிப்புடன் நேற்றைய போட்டியில் விளையாடியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போட்டிக்குப் பின்னர் பேசுகையில், 2 நாட்களாக எனக்கு முதுகுப் பிடிப்பு இருந்து வருகிறது. இருப்பினும் அது எனது ஆட்டத் திறமைக்கு பாதிப்பைத் தரவில்லை. என்னால் அணிக்கு வெற்றி தேடித் தர முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.


இலங்கைக்கு எதிரான போட்டியின்போது பந்து வீசியபோது முதுகுப் பிடிப்பு அதிகம் சிரமம் தரவில்லை. இதனால்தான் என்னால் நன்றாகப் பந்து வீச முடிந்தது என்றார் ஜம்பா.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்