Australia Vs Sri Lanka: "முதுகுப்பிடிப்புடன் ஆடினேன்.. சிறப்பாக பவுல் செய்தது மகிழ்ச்சி".. ஆடம் ஜம்ப

Oct 17, 2023,11:37 AM IST

லக்னோ: ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான உலகக் கோப்பைப் போட்டியில், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, தான் முதுகுப் பிடிப்புடன் விளையாடியதாக கூறியுள்ளார்.


ஆஸ்திரேலியா - இலங்கை இடையே நேற்று லக்னோவில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்ததால் இந்தப் போட்டியில் வெல்வது அந்த அணிக்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் அதன் பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் ஒரு வெறி இருந்தது.




முதலில் பவுலிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கை கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய  அவர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது அபாரமான பந்து வீச்சு காரணமாக இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


8 ஓவர்கள் வீசிய அவர் 1 மெய்டன் ஓவர் போட்டு, 47 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் காரணமாக, ஆஸ்திரேலியாவின் சாம்பியன் கனவு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.


இந்த நிலையில் ஆடம் ஜம்பா, முதுகுப்பிடிப்புடன் நேற்றைய போட்டியில் விளையாடியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போட்டிக்குப் பின்னர் பேசுகையில், 2 நாட்களாக எனக்கு முதுகுப் பிடிப்பு இருந்து வருகிறது. இருப்பினும் அது எனது ஆட்டத் திறமைக்கு பாதிப்பைத் தரவில்லை. என்னால் அணிக்கு வெற்றி தேடித் தர முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.


இலங்கைக்கு எதிரான போட்டியின்போது பந்து வீசியபோது முதுகுப் பிடிப்பு அதிகம் சிரமம் தரவில்லை. இதனால்தான் என்னால் நன்றாகப் பந்து வீச முடிந்தது என்றார் ஜம்பா.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்