டெல்லி: தனது பாஸ் தன்னிடம் ஆபாசமாக பேசியதால் கடுப்பான ஊழியர், அடுத்த நொடியே ராஜினாமா கடிதத்தை அனுப்பி அதை ரெடிட் தளத்திலும் பகிர்ந்தார். அந்த ஊழியருக்கு ஆதரவாக தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோபம் வருவதும், கோபத்தில் வார்த்தைகள் தடிப்பதும் பலருக்கும் பல நேரங்களில் நடப்பதுதான். கடும் கோபத்திலும் கூட நிதானமாக இருப்பவர்கள் மிக மிக அரிது. கோபம் வரும்போது பலர் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த சம்பவம் அறுவெறுப்பானதாக மாறி விடுகிறது. மனக் காயங்களையும் ஏற்படுத்தி விடுகிறது.
வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு அதற்காக வருந்துவோர் பலர் உண்டு. சே.. அந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது.. கொஞ்சம் நாக்கை அடக்கியிருக்கலாம்.. அவசரப்பட்டுட்டோமே என்று பலரும் பீல் பண்ணுவார்கள். சிலருக்கோ தாங்கள் பேசியது குறித்து வெட்கமோ, கூச்சமோ இருக்காது. சரியாதான் பேசினோம் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
இந்த நிலையில் ஜான் என்பவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை ரெடிட் தளத்தில் பகிர்ந்து பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள ரெடிட் பதிவில் இப்படிக் கூறியிருக்கிறார்.
"நான் ஒர்க் பிரம் ஹோம் செய்கிறேன். ஒரு கம்ப்யூட்டர் அக்ஸஸ் தொடர்பாக எனது பாஸைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அது அவரைக் கோபப்படுத்தி விட்டது. இதையெல்லாம் ப்ரீயாக இருக்கும் போது செய்திருக்கக் கூடாதா.. வேலை நேரத்தில்தான் செய்யணுமா என்று கோபமாக கேட்டார். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை "f.. off " என்று அவர் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உடனே நான், இதை இலவசமாக செய்யவில்லை. எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்.. இந்த நொடியே.. மறுபடியும் போய் யாரிடமும் f..off என்று சொல்லாதீர்கள் என்று கூறி விட்டேன் என்று கூறி தான் அனுப்பிய ராஜினாமா மெயிலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் அனுப்பிய மெயிலுக்கு இதுவரை பதில் வரவில்லையாம். இந்த பதிவுக்கு பலரும் வந்து கமெண்ட் கொடுத்துக் கொண்டுள்ளனர். அதில் ஒருவர், நீங்க இப்படி பதில் அனுப்பியிருக்கக் கூடாது ஜான்.. உங்களோ பீட்பேக்குக்கு நன்றி அந்தோணி.. உங்களோட அட்வைஸை பின்பற்ற முடிவு செய்திருக்கேன்.. f* பண்ணப் போறேன்.. அதையும் உடனே பண்ணப் போறேன் என்று கூறியிருக்க வேண்டும் என்று ரசாபாசமாக கமெண்ட் செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
{{comments.comment}}