மணிப்பூர் முதல்வர் கையாலாகாதவராக இருக்கிறார் - டி.ஆர். பாலு கடும் பாய்ச்சல்

Aug 08, 2023,02:31 PM IST

சென்னை: மணிப்பூர் முதல்வர் கையாலகாதவராக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியோ, அந்த மாநிலத்துக்கே போகாமல் தவிர்த்தார். ஆனால் நாங்கள் போனோம் என்று கூறியுள்ளார் திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு.


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீது அனல் பறக்க விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.


திமுக சார்பில் டி.ஆர். பாலு பேசினார். அவர் பேசுகையில்,  மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள மக்கள் ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 143 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். 65,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி புலம் பெயர்ந்துள்ளனர். 2 பெண்களை நிர்வாணப்படுத்தி பொது இடத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். குழு பலாத்காரமும் செய்யப்டடுள்ளனர்.


மணிப்பூர்  முதல்வர்  கையலாகாதவராக இருக்கிறார். பிரதமர் நாடாளுமன்றத்துக்கே வருவதில்லை. மணிப்பூருக்கும் அவர் போகவில்லை. ஆனால் இந்தியா கூட்டணிக் கட்சியின் பிரதிநிதிகள் அங்கு சென்றோம். மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்டோம்.


பாஜக அரசு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு ஒரு உதாரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இதுவரை கட்டடம் கட்டப்படவில்லை என்று கூறினார் டி.ஆர்பாலு.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்