மணிப்பூர் விவகாரம் : விடிய விடிய பார்லிமென்ட் முன் போராட்டம் நடத்திய "இ.ந்.தி.யா."

Jul 25, 2023,09:52 AM IST
டெல்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்புமாக எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் சிலர் விடிய விடிய அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளனர். 

தற்போது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர்ந்து நடந்து வருகிறது. கூட்டம் துவங்கியது முதலே மணிப்பூர் வன்முறை தொடர்பான விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் எதிர்க்கட்சிகள். கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, கூட்டம் முடிந்ததும் இரவு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பி.,க்கள் சிலர் பார்லிமென்ட் கட்டிடம் முன் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த எம்பி.,க்கள் இரவு 11 மணியளவில் அமைதி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், 3வது நாளாக பார்லிமென்ட் நடைபெற வில்லை. இதற்கு காரணம் எங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது தான். இரண்டு மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கு இரண்டு அவைகளிலும் பிரதமர் மோடி தன்னிலை  விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல எம்.பி.,க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளனர். நேரக்கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைத்து கட்சிகளும் இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்