சென்னை: டி. இமானின் இசையில் பிரபல பாடகர் மனோ முதல் முறையாக லெவன் படத்தில் இணைந்து பாடி உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இசையமைப்பாளர் டி இமானும், பிரபல பாடகர் மனோவும் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக பயணித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை பணியாற்றியதில்லை. இந்த நிலையில் லெவன் படத்தில் முதல் முறையாக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். இப்படத்தை ஏ.ஆர் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.
இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே சில நேரங்களில் சில மனிதர்கள், செம்பி ஆகிய பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தயாரித்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு, மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் லெவன் படத்தை இயக்கியுள்ளார்.
இதில் பிரபல தெலுங்கு நடிகரான நவீன் சந்திரா நாயகனாகவும், ரியா ஹரி நாயகியாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் விருமாண்டி புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், வத்திக்குச்சி புகழ் திலீபன், மெட்ராஸ் புகழ் ரித்திகா, அர்ஜை உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் லெவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புலனாய்வு திரில்லர் படமாக உருவாகியுள்ள லெவன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லெவன் படத்தின் பாடல் குறித்து மனோ கூறுகையில், இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன் என கூறினார்.
இசையமைப்பாளர் டி இமான் கூறுகையில், மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது. அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார் என கூறினார்.
இப்படம் குறித்த இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் கூறுகையில், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}