டி இமான் இசையில் முதல்முறையாக.. மனோவின் குரல் .. லெவன் படம்.. வேற லெவல் காம்போ!

May 08, 2024,03:28 PM IST

சென்னை: டி. இமானின் இசையில் பிரபல பாடகர் மனோ முதல் முறையாக லெவன் படத்தில் இணைந்து பாடி உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


இசையமைப்பாளர் டி இமானும், பிரபல பாடகர்  மனோவும் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக பயணித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை பணியாற்றியதில்லை. இந்த நிலையில்  லெவன் படத்தில் முதல் முறையாக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். இப்படத்தை ஏ.ஆர் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். 




இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே சில நேரங்களில் சில மனிதர்கள், செம்பி ஆகிய பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தயாரித்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு, மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் லெவன் படத்தை இயக்கியுள்ளார்.


இதில் பிரபல தெலுங்கு நடிகரான நவீன் சந்திரா நாயகனாகவும், ரியா ஹரி நாயகியாகவும் நடித்துள்ளார்.  இவர்களுடன் விருமாண்டி புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், வத்திக்குச்சி புகழ் திலீபன், மெட்ராஸ் புகழ் ரித்திகா, அர்ஜை உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.


தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும்  லெவன் படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புலனாய்வு திரில்லர் படமாக உருவாகியுள்ள லெவன் திரைப்படம் விரைவில்  வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


லெவன் படத்தின் பாடல் குறித்து  மனோ கூறுகையில்,  இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன் என கூறினார். 




இசையமைப்பாளர் டி இமான் கூறுகையில், மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது. அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார் என கூறினார்.


இப்படம் குறித்த  இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்  கூறுகையில், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்