"மன்னிப்பு கேட்டு விட்டார்".. மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்.. போலீஸுக்கு திரிஷா கோரிக்கை!

Dec 01, 2023,06:16 PM IST

சென்னை: லியோ படம் தொடர்பாக நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு வழக்கில், நடிகை திரிஷாவிடம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்துள்ள திரிஷா, மன்னிப்பு கேட்டு விட்டதால் மன்சூர் அலிகான் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என்று கோரியுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியனார் மன்சூர் அலிகான். இவரது பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் கண்டனங்களும் வழுத்து வந்தது. திரிஷாவும் டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் இனி எந்த படத்திலும் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்தனர். இதன் பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர்  போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்து வந்தார். அதனைத் தொடர்ந்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மன்சூர் அலிகான். 




அந்த அறிக்கையில் 'எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு.  இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வளம் வரும் போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக' எனக் குறிப்பிட்டு இருந்தார்.   இதனை அறிந்த திரிஷாவும்  எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது, ' தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வ பண்பு' என பதிவிட்டு இருந்தார்.


அப்பாடா இந்த பிரச்சனை முடிந்தது என்று இருந்த நிலையில், மீண்டும்  பிரச்சனையை தொடரும் விதமாக அந்த அறிக்கையில், மன்னித்துவிடு என்று நான் கூறவில்லை என மன்சூர் அலிகான் கூறினார். அறிக்கையை  ஃபோனில் சொன்னதால் இந்த தவறு நடந்துவிட்டது என்று மன்சூர் அலிகான் கூற,  இது மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் பிரச்சனை வளர்த்துக் கொண்டே போக, இந்த வழக்கில் திரிஷாவிடம் விசாரணை நடத்திய பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 


இது தொடர்பாக,  திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சிற்கு  விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகை திரிஷா எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் கூறியிருந்தனர்.  அதன்பேரில் திரிஷா பதில் அளித்துள்ளார். அதில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டார். எனவே மேல் நடவடிக்கை தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.


இதன் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீதான வழக்கை காவல்துறை கைவிடும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்