கூட்டணியாவது, கூட்டுப் பொறியலாவது.. அதிமுகவுக்கு குர்பானி தரப் போறேன்.. மன்சூர் அலிகான் அதிரடி

Mar 20, 2024,06:31 PM IST

சென்னை: அதிமுகவுடன் கூட்டணியும் கிடையாது, கூட்டுப் பொறியலும் கிடையாது.. அவர்களுக்கு குர்பானி கொடுக்கப் போறேன் என்று இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் அதிரடியாக கூறியுள்ளார். 


இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கலும் செய்யவுள்ளார்.


18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. 




நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்தார். அதிமுகவுடன் பேசவும் செய்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 


இதனால் ஏமாற்றமடைந்த மன்சூர் அலிகான் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்து விட்டார். வேலூரில் முகாமிட்ட அவர் அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறினார், பிரச்சாரத்திலும் இறங்கினார். 

இந்த நிலையில் இன்று  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் மன்சூர் அலிகான்.


கூட்டணியும் இல்லை, கூட்டுப் பொறியலும் இல்லை. தேர்தலில் தனியாக நிற்க போகிறேன். ஆனால் அதிமுக கூட்டணிக்கு குர்பானி கொடுக்கப் போகிறேன் என மன்சூர் அலிகான் அதிரடியாக பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்