சென்னை: அதிமுகவுடன் கூட்டணியும் கிடையாது, கூட்டுப் பொறியலும் கிடையாது.. அவர்களுக்கு குர்பானி கொடுக்கப் போறேன் என்று இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் அதிரடியாக கூறியுள்ளார்.
இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கலும் செய்யவுள்ளார்.
18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்தார். அதிமுகவுடன் பேசவும் செய்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த மன்சூர் அலிகான் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்து விட்டார். வேலூரில் முகாமிட்ட அவர் அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறினார், பிரச்சாரத்திலும் இறங்கினார்.
இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் மன்சூர் அலிகான்.
கூட்டணியும் இல்லை, கூட்டுப் பொறியலும் இல்லை. தேர்தலில் தனியாக நிற்க போகிறேன். ஆனால் அதிமுக கூட்டணிக்கு குர்பானி கொடுக்கப் போகிறேன் என மன்சூர் அலிகான் அதிரடியாக பேசியுள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}