கூட்டணியாவது, கூட்டுப் பொறியலாவது.. அதிமுகவுக்கு குர்பானி தரப் போறேன்.. மன்சூர் அலிகான் அதிரடி

Mar 20, 2024,06:31 PM IST

சென்னை: அதிமுகவுடன் கூட்டணியும் கிடையாது, கூட்டுப் பொறியலும் கிடையாது.. அவர்களுக்கு குர்பானி கொடுக்கப் போறேன் என்று இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் அதிரடியாக கூறியுள்ளார். 


இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கலும் செய்யவுள்ளார்.


18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. 




நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்தார். அதிமுகவுடன் பேசவும் செய்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 


இதனால் ஏமாற்றமடைந்த மன்சூர் அலிகான் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்து விட்டார். வேலூரில் முகாமிட்ட அவர் அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறினார், பிரச்சாரத்திலும் இறங்கினார். 

இந்த நிலையில் இன்று  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் மன்சூர் அலிகான்.


கூட்டணியும் இல்லை, கூட்டுப் பொறியலும் இல்லை. தேர்தலில் தனியாக நிற்க போகிறேன். ஆனால் அதிமுக கூட்டணிக்கு குர்பானி கொடுக்கப் போகிறேன் என மன்சூர் அலிகான் அதிரடியாக பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்