ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சால் மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை.. முதல்வர் கொடுத்த விளக்கம்!

Mar 06, 2025,05:09 PM IST

மும்பை: மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று ஆர்எஸ்ஆஸ் மூத்த தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி கூறியதால் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்த, மராத்திதான் மும்பையின் மொழி. அனைவரும் அதை கண்டிப்பாக கற்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.


மும்மொழிக் கொள்கை தொடர்பாக தென் மாநிலங்களில் பிரச்சினை வெடித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற ஒரு மொழிப் பிரச்சினை கிளம்பியுள்ளது. மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரான பய்யாஜி, மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று கூறியிருப்பதற்கு அங்கு எதிர்க்கட்சிகளாக உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.




முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜோஷி பேசும்போது கூறுகையில், மும்பைக்கு ஒரு மொழி கிடையாது. அதற்குப் பல மொழிகள் உள்ளன. சில பகுதிகளில் குறிப்பிட்ட மொழி பேசப்படுகிறது. கட்கோபரில் குஜராத்தி பேசப்படுகிறது. கிர்காம் பகுதியில் இந்தியில் பேசுவோர் உள்ளனர். மராத்தியிலும் பேசுகிறார்கள். எனவே மும்பையில் மராத்தி மட்டுமே அவசியம் என்று கூறி விட முடியாது என்று கூறியிருந்தார்.


இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து சட்டசபையில் இதுதொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் விளக்கம் அளித்துப் பேசும்போது, பய்யாஜி சொன்னது குறித்து என்க்குத் தெரியவில்லை. ஆனால் மும்பையின் மொழி மராத்தி, மகாராஷ்டிராவின் மொழி மராத்தி. அனைவரும் மராத்தி கற்க வேண்டும், மராத்தியில் பேச வேண்டும்.


பிற மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். உங்களது மொழியை நீங்கள் மதிப்பீர்கள் என்றால் பிற மொழிகளையும் நேசித்து அதையும் மதிக்க வேண்டும். பய்யாஜி இதை ஏற்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார் பட்னாவிஸ்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்