மும்பை: மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று ஆர்எஸ்ஆஸ் மூத்த தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி கூறியதால் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்த, மராத்திதான் மும்பையின் மொழி. அனைவரும் அதை கண்டிப்பாக கற்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக தென் மாநிலங்களில் பிரச்சினை வெடித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற ஒரு மொழிப் பிரச்சினை கிளம்பியுள்ளது. மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரான பய்யாஜி, மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று கூறியிருப்பதற்கு அங்கு எதிர்க்கட்சிகளாக உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜோஷி பேசும்போது கூறுகையில், மும்பைக்கு ஒரு மொழி கிடையாது. அதற்குப் பல மொழிகள் உள்ளன. சில பகுதிகளில் குறிப்பிட்ட மொழி பேசப்படுகிறது. கட்கோபரில் குஜராத்தி பேசப்படுகிறது. கிர்காம் பகுதியில் இந்தியில் பேசுவோர் உள்ளனர். மராத்தியிலும் பேசுகிறார்கள். எனவே மும்பையில் மராத்தி மட்டுமே அவசியம் என்று கூறி விட முடியாது என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து சட்டசபையில் இதுதொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் விளக்கம் அளித்துப் பேசும்போது, பய்யாஜி சொன்னது குறித்து என்க்குத் தெரியவில்லை. ஆனால் மும்பையின் மொழி மராத்தி, மகாராஷ்டிராவின் மொழி மராத்தி. அனைவரும் மராத்தி கற்க வேண்டும், மராத்தியில் பேச வேண்டும்.
பிற மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். உங்களது மொழியை நீங்கள் மதிப்பீர்கள் என்றால் பிற மொழிகளையும் நேசித்து அதையும் மதிக்க வேண்டும். பய்யாஜி இதை ஏற்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார் பட்னாவிஸ்.
தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!
பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
{{comments.comment}}