மும்பை: மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று ஆர்எஸ்ஆஸ் மூத்த தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி கூறியதால் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்த, மராத்திதான் மும்பையின் மொழி. அனைவரும் அதை கண்டிப்பாக கற்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக தென் மாநிலங்களில் பிரச்சினை வெடித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற ஒரு மொழிப் பிரச்சினை கிளம்பியுள்ளது. மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரான பய்யாஜி, மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று கூறியிருப்பதற்கு அங்கு எதிர்க்கட்சிகளாக உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜோஷி பேசும்போது கூறுகையில், மும்பைக்கு ஒரு மொழி கிடையாது. அதற்குப் பல மொழிகள் உள்ளன. சில பகுதிகளில் குறிப்பிட்ட மொழி பேசப்படுகிறது. கட்கோபரில் குஜராத்தி பேசப்படுகிறது. கிர்காம் பகுதியில் இந்தியில் பேசுவோர் உள்ளனர். மராத்தியிலும் பேசுகிறார்கள். எனவே மும்பையில் மராத்தி மட்டுமே அவசியம் என்று கூறி விட முடியாது என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து சட்டசபையில் இதுதொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் விளக்கம் அளித்துப் பேசும்போது, பய்யாஜி சொன்னது குறித்து என்க்குத் தெரியவில்லை. ஆனால் மும்பையின் மொழி மராத்தி, மகாராஷ்டிராவின் மொழி மராத்தி. அனைவரும் மராத்தி கற்க வேண்டும், மராத்தியில் பேச வேண்டும்.
பிற மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். உங்களது மொழியை நீங்கள் மதிப்பீர்கள் என்றால் பிற மொழிகளையும் நேசித்து அதையும் மதிக்க வேண்டும். பய்யாஜி இதை ஏற்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார் பட்னாவிஸ்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}