பாடல்:
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
மார்கழி மாதம் மிக அருமையான, உயர்ந்த மாதம். நிலவின் ஒளி பொருந்திய இந்த நல்ல நாளில், வளம், செழுமையும் நிறைந்த ஆயர்பாடியை சேர்ந்த பெண்களே வாருங்கள் நீராட செல்லலாம். கூர்மையான ஆயுதத்துடன் போர்கலைகள் பலவும் கற்ற நந்தகோபனின் மகனும், அழகிய கண்களை உடைய பெண்ணான யசோதையின் குழந்தையும், சிங்கம் போன்ற வீரத்தையும் உடையவன் நம்முடைய கண்ணன். கார்மேகம் போன்ற கருமை நிற மேனியையும், சிவந்த கண்களையும், சூரினைப் போன்று ஒளிமிகுந்த கதிர்களை வீசும் முகத்தையும் உடையவன் நம்முடைய கண்ணன். இந்த நல்ல நாளில் அவனை வணங்கி வழிபட்டால் உலகத்தில் உள்ள அனைவரும் போற்றி புகழும் படியாக நமக்கு உயர்வான வைகுண்ட பதவியை அந்த நாராயணன் அருள்வான்.
ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!
பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்
திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
{{comments.comment}}