பாடல்:
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
மார்கழி மாதம் மிக அருமையான, உயர்ந்த மாதம். நிலவின் ஒளி பொருந்திய இந்த நல்ல நாளில், வளம், செழுமையும் நிறைந்த ஆயர்பாடியை சேர்ந்த பெண்களே வாருங்கள் நீராட செல்லலாம். கூர்மையான ஆயுதத்துடன் போர்கலைகள் பலவும் கற்ற நந்தகோபனின் மகனும், அழகிய கண்களை உடைய பெண்ணான யசோதையின் குழந்தையும், சிங்கம் போன்ற வீரத்தையும் உடையவன் நம்முடைய கண்ணன். கார்மேகம் போன்ற கருமை நிற மேனியையும், சிவந்த கண்களையும், சூரினைப் போன்று ஒளிமிகுந்த கதிர்களை வீசும் முகத்தையும் உடையவன் நம்முடைய கண்ணன். இந்த நல்ல நாளில் அவனை வணங்கி வழிபட்டால் உலகத்தில் உள்ள அனைவரும் போற்றி புகழும் படியாக நமக்கு உயர்வான வைகுண்ட பதவியை அந்த நாராயணன் அருள்வான்.
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
{{comments.comment}}