- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 04 :
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
வீணை,யாழ் போன்ற பலவிதமான இசைக் கருவிகளை கொண்டு ஒருபுறம் இன்னிசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், உன்னை போற்றி பல விதமான திருநாமங்களால் அடியவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். உன்னை போற்றி பூஜிப்பதற்காக கைகளில் பூமாலைகள் ஏந்தி நிற்பவர் ஒரு புறம் இருக்கிறார்கள். உன்னை வேண்டி தொழுது, கண்ணீர் பெருக வேண்டிடும் அடியாளர்கள் கைகூப்பி வணங்கியபடி ஒரு புறம் இருக்க, திருப்பெருந்துறையில் வீட்டிற்றிருக்கும் சிவ பெருமானே! உன்னனுடைய அடியார்களை போல் என்னையும் ஆட் கொண்டு, உன்னுடைய இனிமையான அருள் வழங்குவதற்காக எங்கள் தலைவானிய பெருமானை தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}