- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 04 :
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
வீணை,யாழ் போன்ற பலவிதமான இசைக் கருவிகளை கொண்டு ஒருபுறம் இன்னிசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், உன்னை போற்றி பல விதமான திருநாமங்களால் அடியவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். உன்னை போற்றி பூஜிப்பதற்காக கைகளில் பூமாலைகள் ஏந்தி நிற்பவர் ஒரு புறம் இருக்கிறார்கள். உன்னை வேண்டி தொழுது, கண்ணீர் பெருக வேண்டிடும் அடியாளர்கள் கைகூப்பி வணங்கியபடி ஒரு புறம் இருக்க, திருப்பெருந்துறையில் வீட்டிற்றிருக்கும் சிவ பெருமானே! உன்னனுடைய அடியார்களை போல் என்னையும் ஆட் கொண்டு, உன்னுடைய இனிமையான அருள் வழங்குவதற்காக எங்கள் தலைவானிய பெருமானை தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}