-ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 5:
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாக மட்டும் இல்லாமல்,நீ எப்படி இருப்பாய் என அறிய முயல்பவர்களின் சிந்தனைக்கு எட்டாத அனைத்துமாக நீ இருக்கிறாய். உன்னை போற்றி பாடும் புலவர்களின் கீதங்களாகவும், அவர்கள் பாடும் பாட்டாகவும், இசையாகவும், ஆடுதலாக மட்டுமில்லால் நீ இப்படித்தான் இருப்பாய், இங்கு தான் இருப்பாய் என எவரும் கண்டறிந்து சொன்னதாக நாங்கள் கேட்டதில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே!உன்னுடைய திருக்காட்சியை கண்டவர் எவரும் இல்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பு வந்து, எங்களின் பாவங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். எங்களுக்கு உன்னுடைய அருளை வழங்குவதற்காக எங்கள் தலைவனே எழுந்தருள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}