-ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 5:
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாக மட்டும் இல்லாமல்,நீ எப்படி இருப்பாய் என அறிய முயல்பவர்களின் சிந்தனைக்கு எட்டாத அனைத்துமாக நீ இருக்கிறாய். உன்னை போற்றி பாடும் புலவர்களின் கீதங்களாகவும், அவர்கள் பாடும் பாட்டாகவும், இசையாகவும், ஆடுதலாக மட்டுமில்லால் நீ இப்படித்தான் இருப்பாய், இங்கு தான் இருப்பாய் என எவரும் கண்டறிந்து சொன்னதாக நாங்கள் கேட்டதில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே!உன்னுடைய திருக்காட்சியை கண்டவர் எவரும் இல்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பு வந்து, எங்களின் பாவங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். எங்களுக்கு உன்னுடைய அருளை வழங்குவதற்காக எங்கள் தலைவனே எழுந்தருள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}