-ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 5:
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள் :
பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாக மட்டும் இல்லாமல்,நீ எப்படி இருப்பாய் என அறிய முயல்பவர்களின் சிந்தனைக்கு எட்டாத அனைத்துமாக நீ இருக்கிறாய். உன்னை போற்றி பாடும் புலவர்களின் கீதங்களாகவும், அவர்கள் பாடும் பாட்டாகவும், இசையாகவும், ஆடுதலாக மட்டுமில்லால் நீ இப்படித்தான் இருப்பாய், இங்கு தான் இருப்பாய் என எவரும் கண்டறிந்து சொன்னதாக நாங்கள் கேட்டதில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே!உன்னுடைய திருக்காட்சியை கண்டவர் எவரும் இல்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பு வந்து, எங்களின் பாவங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். எங்களுக்கு உன்னுடைய அருளை வழங்குவதற்காக எங்கள் தலைவனே எழுந்தருள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!
திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி
நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!
தமிழ்நாடு நாள்.. தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... நம் தமிழ்நாடு!
{{comments.comment}}