-ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 5:
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள் :
பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாக மட்டும் இல்லாமல்,நீ எப்படி இருப்பாய் என அறிய முயல்பவர்களின் சிந்தனைக்கு எட்டாத அனைத்துமாக நீ இருக்கிறாய். உன்னை போற்றி பாடும் புலவர்களின் கீதங்களாகவும், அவர்கள் பாடும் பாட்டாகவும், இசையாகவும், ஆடுதலாக மட்டுமில்லால் நீ இப்படித்தான் இருப்பாய், இங்கு தான் இருப்பாய் என எவரும் கண்டறிந்து சொன்னதாக நாங்கள் கேட்டதில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே!உன்னுடைய திருக்காட்சியை கண்டவர் எவரும் இல்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பு வந்து, எங்களின் பாவங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். எங்களுக்கு உன்னுடைய அருளை வழங்குவதற்காக எங்கள் தலைவனே எழுந்தருள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}