முதல் முறையாக பாட துவங்கும் மாணிக்கவாசகர், இறைவனின் அருளால் அவரைப் போற்றி பாடுகிறார். வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வரும் தோழிகள், அப்படியே சிவ பெருமானின் பெருமைகளையும், அவரை எப்படி வழிபட வேண்டும் என்பதையும் சொல்வதைப் போல். உலக மக்களுக்கு சிவபெருமானின் அருளை பெறுவதற்கு என்ன வழி என்பதை எடுத்துரைக்கிறார்.

திருவெம்பாவை பாசுரம் 07 :
அன்னே இவையும் சிலயோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள் :
தேவர்களாலும் அணுக முடியாத உலகிற்கே தலைவனாக இருக்கக் கூடிய சிவ பெருமானின் சின்னங்களை எங்கு பார்த்தாலும் உடனே சிவ சிவ என ஓடி வந்து விடுவாயே? தென்னானுடைய சிவனே போற்றி என எங்கு ஓசை கேட்டாலும் அந்த மொழியில் உடனடியாக உள்ளம் உருகி ஓடி வந்து விடுவாயே. அந்த சிவன் எனக்குரியன், என் தலைவன் என சொல்லிடுவாயே. இப்போது அந்த இறைவனின் பெருமைகளை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. இவை அனைத்தையும் கேட்டுமா உனக்கு தூக்கம் போகவில்லை.
விளக்கம் :
ருத்ராட்சம், திருநீறு, சிவனடியார்கள் போன்ற சிவ சின்னங்களை எங்கு பார்த்தாலும் அதை சிவனின் அடையாளமாக கருதுவது சிவ பக்தர்களின் வழக்கம். சைவத்தில் குறிப்பிடப்படும் சிவ சின்னங்கள் வெறும் அடையாளங்களாக இல்லாமல், நம்மை காப்பதற்காக சிவன் அந்த பொருட்களின் வடிவில் இந்த பூலோகத்தில் இருக்கிறான். அவரை பாடி, உள்ளத்தில் நினைத்து, பக்தி செய்து, சிவனை நமக்குள் உணர வேண்டும் என்பதையே மாணிக்கவாசகர் இந்த பாடலில் உணர்த்துகிறார்.
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}