- மஞ்சுளா தேவி
சென்னை: மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் சொகுசு காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளிவந்தது. இதில் நாயகியாக ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, அனிதா சம்பத், ஒய் .ஜி மகேந்திரன், ரெடின் கின்ஸ்லி, நிழல்கள் ரவி, சுனில் போன்ற மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்க, வினோத்குமார் தயாரித்துள்ளார்.
இப்படம் டைம் டிராவல் என்ற பின்னணியில் ஆக்சன் காமெடி கலந்த மசாலா படமாக உருவாகி இருந்தது. இயக்குனர் எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் மூலம் எஸ் .ஜே சூர்யா நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இப்படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட் கொடுத்தது. விஷால் கேரியரில் முதல் முறையாக 100 கோடி வசூல் வசூல் சாதனை செய்த படமும் இதுவே.
ஏற்கனவே விக்ரம் படம் வெற்றி பெற்று ரூ. 500 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது. இதற்காக கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லக்சஸ் கார் மற்றும் உதவி இயக்குனருக்கு அப்பாச்சி பைக்கை பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படம் 600 கோடி வசூலை அள்ளி சாதனை பெற்றது. இதற்காக தயாரிப்பாளர் கலாநிதிமாறன், ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் சொகுசு காரையும், இயக்குனர் நெல்சனுக்கு போச்சே காரையும் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 100 கோடியை எட்டியதைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் வினோத்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.
மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித்குமார் நடிக்கும் படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வருவது நினைவிருக்கலாம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}