திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி தேரோட்ட திருவிழா கோலாகலம்

Feb 23, 2024,01:52 PM IST

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி தேரோட்ட திருவிழா கோலாகலமாக  இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருளைப் பெற்றனர்.


திருச்செந்தூரில், மாசித் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா ஆண்டு தோறும் 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 




ஒன்பதாம் திருநாளில் நேற்று காலை மேலக் கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்க பெருமானும் தனித்தனி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் எட்டு வீதிகளில் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.


அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30  மணிக்கு மகா  தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. முதலில் காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு 7. 45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 7.48 மணிக்கு சுவாமி குமர விடங்க பெருமான் -  வள்ளி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். 


4 ரத வீதிகளை சுற்றிய பின் தேர் மீண்டும் 8:10க்கு நிலைக்கு வந்தது. இதனை தொடர்ந்து காலை 8.15 மணிக்கு தெய்வானை அம்மன் தேர் வீதி உலா வந்து காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். 


கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில், அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.  

11-ம் நாளான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.  12-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை வந்தடைகிறார்கள்.


விழாவினை முன்னிட்டு திருச்செந்தூரில் பாதுகாப்பு பணியில் போலீசார் போடப்பட்டுள்ளனர். சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்