இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் உள்ளிட்டவை குறித்த விவரம் கேட்ட ஒருவருக்கு கிட்டத்தட்ட 40,000 பக்கங்கள் அடங்கிய மாபெரும் ஆவணத்தைக் கொடுத்து அதிர வைத்துள்ளது மத்தியப் பிரதேச மாநில அரசு அலுவலகம் ஒன்று.
இந்தூரைச் சேர்ந்தவர் தர்மேந்திர சுக்லா. இவர் கடந்த கொரோனா காலத்தின்போது இந்தூர் அரசு மருத்துவமனையில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள், கொடுக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான ரசீதுகள் உள்ளிட்டவை குறித்த தகவல் கோரி ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்திருந்தார்.
இதுதொடரபாக தர்மேந்திரா சுக்லா கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் இந்தூர் அரசு மருத்துவமனையில் வாங்கப்பட்ட மருந்துகள், கருவிகள், பிற பொருட்கள் குறித்த விவரத்தை நான் கோரியிருந்தேன். ஆனால் எனக்கு ஒரு மாதத்திற்குள் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து நான் முதலில் அப்பல்லேட் அதிகாரி டாக்டர் ரத் குப்தாவை அணுகினேன். அவர் உடனடியாக தகவல்களைத் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர்தான் எனக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 40,000 பக்க ஆவணத்தை அவர்கள் அளித்தனர். அதை கையால் கொண்டு வர முடியாது என்பதால் காரை எடுத்துக் கொண்டு போய் அதைப் பெற்றுக் கொண்டேன். வண்டி நிறைய அவை நிரம்பி விட்டன. டிரைவர் சீட் மட்டும் தான் காலியாக இருந்தது என்றார்.
ஒரு மாதத்திற்குள் தகவல் அளிக்கப்பட்டால்,ஆவணமாக அளிக்கப்படும் பக்கங்களுக்கு ரூ. 2 கட்டணம் தகவல் கேட்போர் கட்ட வேண்டும். ஆனால் தர்மேந்திராவுக்கு குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள் தகவல�� அளிக்கப்படாத காரணத்தால், இந்த 40,000 பக்கங்களுக்கும் அவரிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உரிய காலத்தில் தகவல் கொடுக்கப்படாத காரணத்தால், இந்த 40,000 பக்கங்களுக்கான தொகை 80 ஆயிரம் ரூபாயை அரசு தேவையில்லாமல் இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}