மகளிர் தினத்தையொட்டி.. ஸ்பெஷல் பார்பி பொம்மைகள்.. விதம் விதமாக தயாரித்த மேட்டல் நிறுவனம்

Mar 07, 2025,10:39 AM IST

லாஸ் ஏஞ்சலெஸ்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை கௌரவப்படுத்தும் நோக்கில் விசேஷமான பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். இது உலக நாடுகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


பெண்களுக்கு பாலின ரீதியாக சம உரிமை அளிக்கும் வகையில் ஊதிய உரிமை, வாக்களிக்கும் உரிமை, போன்ற நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் கடந்த 1910 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி முதல் சர்வதேச மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.  


இவ்வுலகில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம உரிமைகள் பெற்றவர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண்களே நாட்டின் கண்கள் என்ற சிறந்த கொள்கையில் அன்னையாக, சகோதரியாக, தங்கையாக, தோழியாக, மனைவியாக, வலம் பெண்களின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் கொண்டாடுவது வழக்கம். 




அந்த வகையில் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், என முக்கிய இடங்களில் பெண்மையை போற்றும் விதமாக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நாளை கொண்டாடப்பட உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சிறந்த சேவைகளை வழங்குகின்றன. அதில் ஒன்றுதான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள மேட்டல் நிறுவனம்.  இது ஒரு அமெரிக்க பன்னாட்டு பொம்மை தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும்.  


இந்நிறுவனம், குழந்தைகள், பெண்களை, மகிழ்விக்கும், வகையில் பல்வேறு வடிவங்களில்  உடல் வகைகள், தோல் நிறங்கள் மற்றும் பிற பண்புகளைக் கொண்டு உலகின் பன்முகத்தன்மை கொண்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பார்பி பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. பார்பி பொம்மைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. கடந்த ஆண்டு கண் பார்வையற்றவர்களின் பண்புகளை தனித்துவப்படுத்தும் வகையில் பார்வையற்ற பார்பி பொம்மைகள் சந்தைப் படுத்தப்பட்டது.


இந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் நட்பை போற்றும் வகையில் லிமிடெட் எடிசன் பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். குறிப்பாக ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பார்பி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்