லாஸ் ஏஞ்சலெஸ்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை கௌரவப்படுத்தும் நோக்கில் விசேஷமான பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். இது உலக நாடுகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்களுக்கு பாலின ரீதியாக சம உரிமை அளிக்கும் வகையில் ஊதிய உரிமை, வாக்களிக்கும் உரிமை, போன்ற நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் கடந்த 1910 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி முதல் சர்வதேச மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
இவ்வுலகில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம உரிமைகள் பெற்றவர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண்களே நாட்டின் கண்கள் என்ற சிறந்த கொள்கையில் அன்னையாக, சகோதரியாக, தங்கையாக, தோழியாக, மனைவியாக, வலம் பெண்களின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், என முக்கிய இடங்களில் பெண்மையை போற்றும் விதமாக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை கொண்டாடப்பட உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சிறந்த சேவைகளை வழங்குகின்றன. அதில் ஒன்றுதான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள மேட்டல் நிறுவனம். இது ஒரு அமெரிக்க பன்னாட்டு பொம்மை தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும்.
இந்நிறுவனம், குழந்தைகள், பெண்களை, மகிழ்விக்கும், வகையில் பல்வேறு வடிவங்களில் உடல் வகைகள், தோல் நிறங்கள் மற்றும் பிற பண்புகளைக் கொண்டு உலகின் பன்முகத்தன்மை கொண்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பார்பி பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. பார்பி பொம்மைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. கடந்த ஆண்டு கண் பார்வையற்றவர்களின் பண்புகளை தனித்துவப்படுத்தும் வகையில் பார்வையற்ற பார்பி பொம்மைகள் சந்தைப் படுத்தப்பட்டது.
இந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் நட்பை போற்றும் வகையில் லிமிடெட் எடிசன் பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். குறிப்பாக ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பார்பி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}