மகளிர் தினத்தையொட்டி.. ஸ்பெஷல் பார்பி பொம்மைகள்.. விதம் விதமாக தயாரித்த மேட்டல் நிறுவனம்

Mar 07, 2025,10:39 AM IST

லாஸ் ஏஞ்சலெஸ்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை கௌரவப்படுத்தும் நோக்கில் விசேஷமான பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். இது உலக நாடுகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


பெண்களுக்கு பாலின ரீதியாக சம உரிமை அளிக்கும் வகையில் ஊதிய உரிமை, வாக்களிக்கும் உரிமை, போன்ற நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் கடந்த 1910 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி முதல் சர்வதேச மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.  


இவ்வுலகில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம உரிமைகள் பெற்றவர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண்களே நாட்டின் கண்கள் என்ற சிறந்த கொள்கையில் அன்னையாக, சகோதரியாக, தங்கையாக, தோழியாக, மனைவியாக, வலம் பெண்களின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் கொண்டாடுவது வழக்கம். 




அந்த வகையில் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், என முக்கிய இடங்களில் பெண்மையை போற்றும் விதமாக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நாளை கொண்டாடப்பட உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சிறந்த சேவைகளை வழங்குகின்றன. அதில் ஒன்றுதான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள மேட்டல் நிறுவனம்.  இது ஒரு அமெரிக்க பன்னாட்டு பொம்மை தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும்.  


இந்நிறுவனம், குழந்தைகள், பெண்களை, மகிழ்விக்கும், வகையில் பல்வேறு வடிவங்களில்  உடல் வகைகள், தோல் நிறங்கள் மற்றும் பிற பண்புகளைக் கொண்டு உலகின் பன்முகத்தன்மை கொண்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பார்பி பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. பார்பி பொம்மைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. கடந்த ஆண்டு கண் பார்வையற்றவர்களின் பண்புகளை தனித்துவப்படுத்தும் வகையில் பார்வையற்ற பார்பி பொம்மைகள் சந்தைப் படுத்தப்பட்டது.


இந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் நட்பை போற்றும் வகையில் லிமிடெட் எடிசன் பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். குறிப்பாக ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பார்பி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்