875 தமிழக மீனவர்கள் கொலை.. அவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?.. ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

Aug 06, 2024,03:46 PM IST

டெல்லி: கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்.


சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு தமிழக மீனவர்களின் படகு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக மீனவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சினை எழுப்பினார்.  அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இன்றைக்கும் இலங்கை கடற்படையினரால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பிரதமரை சந்தித்தேன். அப்போது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கவலை வேண்டாம் என தெரிவித்திருந்தார். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்