875 தமிழக மீனவர்கள் கொலை.. அவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?.. ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

Aug 06, 2024,03:46 PM IST

டெல்லி: கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்.


சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு தமிழக மீனவர்களின் படகு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக மீனவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சினை எழுப்பினார்.  அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இன்றைக்கும் இலங்கை கடற்படையினரால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பிரதமரை சந்தித்தேன். அப்போது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கவலை வேண்டாம் என தெரிவித்திருந்தார். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்