டெல்லி: கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்.
சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு தமிழக மீனவர்களின் படகு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக மீனவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சினை எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இன்றைக்கும் இலங்கை கடற்படையினரால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பிரதமரை சந்தித்தேன். அப்போது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கவலை வேண்டாம் என தெரிவித்திருந்தார். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}