மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. இன்று வீடு திரும்புவதாக தகவல்..!

May 06, 2025,10:56 AM IST

சென்னை:  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, அவ்வப்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சமீபத்தில் இவர் வீட்டில் கீழே வழுக்கி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.




அந்த வகையில் தற்போது மீண்டும் இரவு வீட்டில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவின்  உடல்நிலை குறித்து மருத்துவ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயத்தில் இன்று பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

அதிகம் பார்க்கும் செய்திகள்