மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. இன்று வீடு திரும்புவதாக தகவல்..!

May 06, 2025,10:56 AM IST

சென்னை:  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, அவ்வப்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சமீபத்தில் இவர் வீட்டில் கீழே வழுக்கி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.




அந்த வகையில் தற்போது மீண்டும் இரவு வீட்டில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவின்  உடல்நிலை குறித்து மருத்துவ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயத்தில் இன்று பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி ஜில் ஜில் கிளைமேட் தான்.. தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்குமாம்.. வானிலை மையம் கணிப்பு..!

news

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியாகிறது.. ஆர்வத்தில் மாணவர்கள்!

news

கொளுத்தும் கோடை காலத்தில்.. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன குடிக்கலாம்..?

news

IPL 2026.. CSKவில் யாருக்கெல்லாம் கெட் அவுட்.. யாரெல்லாம் நீடிப்பாங்க?.. A quick analysis!

news

இந்தியாவுடன் மோதல் போக்கு.. பாகிஸ்தான் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.. மூடிஸ் எச்சரிக்கை

news

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்..‌ நாளை போர்க்கால ஒத்திகை.. மத்திய அரசு அறிவிப்பு!

news

நுங்கு சாப்பிடலையோ நுங்கு.. வந்தாச்சு சீசன்.. வாங்கி சாப்பிட்டு ஜில்லுன்னு இருங்க!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்