திருச்சி: நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தும் கூட கிடைக்காத தீப்பெட்டிச் சின்னம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
மதிமுகவுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தீப்பட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்சி திருச்சியில் மட்டும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு அது ஆரம்பத்திலிருந்து போட்டியிட்டு வந்த பம்பரம் சின்னம் இந்த முறை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சட்ட போராட்டங்களிலும் மதிமுக ஈடுபட்டது. இருப்பினும் சின்னம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்த நிலையில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துறை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டார். இதன் மூலம் தீப்பெட்டி சின்னத்தில் மதிமுக இந்த தொகுதியில் போட்டியிட உள்ளது. சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அந்த சின்னத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்ச ரகுபதி செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தா.
மதிமுக முதல்முறையாக வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நாம் தமிழர் கட்சி இதே தீப்பெட்டி சின்னத்தை தான் முன்பு கோரி இருந்தது. தீப்பெட்டி சின்னம் அல்லது கப்பல் ஆகியவற்றில் ஒன்றை கொடுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீமான் கூட தீக்குச்சியை வைத்து நாடு முழுவதும் விழிப்புணர்வை பற்ற வைக்க ஆர்வத்துடன் காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு தீப்பெட்டி சின்னம் வழங்கப்படவில்லை என்று ஆதங்கமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சீமான் கைக்கு வராமல் நழுவிய தீப்பெட்டி தற்போது துரை வைகோவின் கையில் வந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}