திருச்சி: நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தும் கூட கிடைக்காத தீப்பெட்டிச் சின்னம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
மதிமுகவுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தீப்பட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்சி திருச்சியில் மட்டும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு அது ஆரம்பத்திலிருந்து போட்டியிட்டு வந்த பம்பரம் சின்னம் இந்த முறை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சட்ட போராட்டங்களிலும் மதிமுக ஈடுபட்டது. இருப்பினும் சின்னம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்த நிலையில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அந்த வகையில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துறை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டார். இதன் மூலம் தீப்பெட்டி சின்னத்தில் மதிமுக இந்த தொகுதியில் போட்டியிட உள்ளது. சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அந்த சின்னத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்ச ரகுபதி செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தா.
மதிமுக முதல்முறையாக வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நாம் தமிழர் கட்சி இதே தீப்பெட்டி சின்னத்தை தான் முன்பு கோரி இருந்தது. தீப்பெட்டி சின்னம் அல்லது கப்பல் ஆகியவற்றில் ஒன்றை கொடுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீமான் கூட தீக்குச்சியை வைத்து நாடு முழுவதும் விழிப்புணர்வை பற்ற வைக்க ஆர்வத்துடன் காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு தீப்பெட்டி சின்னம் வழங்கப்படவில்லை என்று ஆதங்கமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சீமான் கைக்கு வராமல் நழுவிய தீப்பெட்டி தற்போது துரை வைகோவின் கையில் வந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}