நானும் எழுதினேன்!

Jul 20, 2026,12:55 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


என்னென்னவோ எழுதவில்லை 

எண்ணங்களில் தவழ்ந்ததை எழுதினேன், 


கற்பனையை தீட்டவில்லை 

கடந்த காலத்தை விவரித்தேன்,


விற்பனையாகும் மனிதத்தின் மறைமுகத்தை எடுத்துக் காட்டினேன்,

மாந்தர்களின் முகமூடியின் விரிசலில் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்,


பார்ப்பவையெல்லாம் போட்டியும் பொறாமையும் வஞ்சகமுமான குணமென அறிந்தேன்,

அகமொன்று புறமொன்று அழுக்கென அடையாளம் கண்டேன்,


விதியென்று சதியென்று வீதியிலும் வீழ்ந்து கிடக்க வியந்தேன்,

மதி கொண்டு வாழ்வை வெல்ல போராடும் வலி அறிந்தேன்,




விழி திறந்து பார்க்க மனமும் அழ கண்டேன்,

விதவிதமான தகவல்களை நித்தமும் சேகரித்தேன், 


சொற்பதம் கொண்டு சோகமாய் தூரிகையில் வரைந்திட்டேன்,

அரும்பதமாக அவலங்களை அள்ளி தெளித்து விட்டேன், 


குறும்படமாக குடிசையிலும் திரையில்லாமல் ஓட மனம் தளர்ந்தேன், 

பச்சிளம் குழந்தைகளும் பால் குடி மறவாமல் அனாதையாக சிலிர்த்தேன், 


வறுமையின் வட்டத்தில் தேகம் குன்றி போராட கண்டேன், 

கருவறுக்கும் அற்பர்களைக் கண்டு தீப்பிழம்பாய் கொதித்தேன், 


தனியாளாக என்ன செய்யவென எனக்கு நானே நொந்தேன்,

சொல்லியும் தீராத சொல்லில் அடங்காத சோகங்களை கண்ணீராய் வடித்தேன்,,,,

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு

news

"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்

news

Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!

news

சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!

news

அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு

news

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!

news

மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026

news

கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்