சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் டிசம்பர் 14ம் தேதி நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வீட்டு பகுதிகளில் இன்னும் கூட தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் காய்ச்சல், இருமல்,சளி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச முகாம் டிசம்பர் 14 (நாளை மறுநாள் ) நடைபெற உள்ளது. சென்னையை சுற்றி 25 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படையுமாறு விஜய் மக்கள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-12-23 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}