சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் டிசம்பர் 14ம் தேதி நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வீட்டு பகுதிகளில் இன்னும் கூட தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் காய்ச்சல், இருமல்,சளி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச முகாம் டிசம்பர் 14 (நாளை மறுநாள் ) நடைபெற உள்ளது. சென்னையை சுற்றி 25 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படையுமாறு விஜய் மக்கள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-12-23 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}