சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் டிசம்பர் 14ம் தேதி நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வீட்டு பகுதிகளில் இன்னும் கூட தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் காய்ச்சல், இருமல்,சளி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச முகாம் டிசம்பர் 14 (நாளை மறுநாள் ) நடைபெற உள்ளது. சென்னையை சுற்றி 25 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படையுமாறு விஜய் மக்கள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-12-23 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}