Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

Jul 30, 2025,01:02 PM IST

மும்பை: மேகலாயாவில் தேனிலவுக்குப் போன இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலதிபர் ரகுவன்ஷி கொலைச் சம்பவம் திரைப்படமாகவுள்ளது.


மேகாலயாவில் தேனிலவு சென்ற இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்டவர், குற்றவாளிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காரணம், இந்தக் கொலையைத் திட்டமிட்டு செய்தது அவரது மனைவிதான். அதுவும் கல்யாணமான சில நாட்களிலேயே இந்தக் கொடூர முடிவை சந்தித்தார் ரகுவன்ஷி.


இப்போது, ராஜா ரகுவன்ஷியின் கதையை திரைப்படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 2025 மே மாதம் நடந்த இந்தக் கொலையை மையமாக வைத்து "ஹனிமூன் இன் ஷில்லாங்" என்ற திரைப்படம் உருவாகிறது. இதில் ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் ராஜ்வன்ஷி மற்றும் அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா ஆகியோரின் கைது வரையிலான சம்பவங்கள் இடம்பெற உள்ளன.




ராஜா ரகுவன்ஷியின் சகோதரர் சச்சின், திரைப்படத்திற்கு அனுமதி அளித்துள்ளார். "என் சகோதரனின் கொலை கதையை பெரிய திரையில் கொண்டு வராவிட்டால், யார் சரி, யார் தவறு என்று மக்களுக்குத் தெரியாது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார். மற்றொரு சகோதரர் விபின், மேகாலயாவின் உண்மையான முகத்தை திரைப்படத்தில் காட்ட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். 


இப்படத்தை எஸ்.பி.நிம்பாவத் இயக்கவுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், இதுபோன்ற துரோக சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதை எங்கள் படத்தின் மூலம் மக்களுக்கு சொல்ல விரும்புகிறோம் என்றார். படத்தின் 80% படப்பிடிப்பு இந்தூரிலும், மீதமுள்ள 20% மேகாலயாவிலும் நடைபெறும்.


ராஜா ரகுவன்ஷிக்கும், சோனமுக்கும் மே 11ம் தேதி கல்யாணம் நடந்தது. அதன் பிறகு மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் மேகலயாவுக்கு தேனிலவுக்குப் போயிருந்தார். அங்கு வைத்து சோனமின் காதலன் ராஜ் குஷ்வாஹா ரகுவன்ஷியைத் தீர்த்துக் கட்டினார். பின்னர் அவரும்  சோனமும் தலைமறைவாகி விட்டனர். கொலைச் சம்பவம் மே 23 அன்று நடந்தது. சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹா உட்பட எட்டு பேர் மீது குற்றச் சதி, கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்