மெல்லிய பூங்காற்று!

Mar 30, 2026,01:06 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


தென்றல் தாலாட்டில் தென்னங்கீற்றின் சல சலக்கும்

உரசல் கூட அழகான இன்னிசையாய்  தாளமிட  மெல்லியலாள்

எண்ணங்களும்

வெகுதூர தொடர் அலை போல் அவள் விழி முன்னே

நிழலாடியது. 


பூவிதா பெயரின் அழகை போல  அவளும் ஒரு மென்மையான  பூவின் இதழ் போலத்தான். 

ஆம்..... 


அவளும் ஒர் உதிர்க்கப்பட்ட பூவிதழ்...


இளமை கால ஓவியம் போல் உடலழகு. 

மழை மேகம் மிரட்டி வர

பள்ளி செல்லும் சாலையில் புத்தகத்தை அணைத்தபடி அவசர அவசரமாக நடந்து பள்ளி செல்லும் அவளை அணை போட்டு தடுப்பது போல்

மிக அருகில் வந்து நிற்கும் இருசக்கர வாகனத்தில் சிரித்தபடியே பார்த்து நின்றான் சதீஷ். 




என்ன என்பதுபோல் அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்து விட்டு

மேலும் வேகமாக நடந்து சென்றாள் பூவிதா. 


ஏய் உன்னை தான் பேசமாட்டியா....? 

என்ற சதீஷ் குரல் அவளுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. 


என்ன பேச வேண்டும்...? 

உன்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை.... 

வழி விடு  வகுப்பிற்கு நேரமாகி விட்டது. 


இதுவே வாடிக்கையாக

சென்றது

அவளது பள்ளிப்பருவம். 


காலேஜில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. 

அவனது தொல்லைகளும் தொடர்ந்து வந்தது. 


வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்தி விடுவார்கள். பயந்து போய் வெளியே செல்ல மறுத்து விட்டால்

என்ன செய்வது என தெரியாமல் அவனுடன் போராடி வந்தாள் பூவிதா. 


ஒரு சமயம் கெஞ்சினான்

இப்போது எல்லாம் அவன் மிரட்டும் தொனியில் பேசுகிறான். சே என்ன இது பெண்களின் நிலை. 


நிம்மதியாக வெளியில் சென்று தனக்கு பிடித்த படிப்பை தொடர முடியாமல் போகிறதே என கவலையுடன் நடந்து சென்றாள்... 


அவளுக்காக காத்திருப்பது போல் வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் மீது சாய்ந்த  நிலையில்

நின்றிருந்தான் சதீஷ்.


ஏய் என்ன உனக்காக நான் காத்திருப்பது தெரியலயா....? 

கவனிக்காமல் சென்றால் என்ன அர்த்தம்....? 


பிடிக்கலன்னு  அர்த்தம்

தெரியலயா....? 

என்றாள் பூவிதா. 


எனக்கு பிடிச்சிருக்கே

என்றான் அவன். 


இதோ பார்....! 

நான் படிக்க வேண்டும்

நிறைய கனவுகள் எனக்கு இருக்கு தயவு செய்து சிதைத்து விடாதே என கெஞ்சினாள் அவள். 


அவன் விடுவதாக தெரியவில்லை. 


அவள் கலங்கினாள்.  இரு கரங்களையும் குவித்து தயவு செய்து என்னை படிக்க விடு என்றாள். 


அவன் அவளது எந்த பேச்சையும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. 


அவனது மிரட்டலுக்கு பயந்து கல்லூரிக்கு செல்லாமல்கண்களில் நீர் வழிய உதிர்க்கப்பட்ட இதழாக ஏங்கி நின்றாள்

பூவிதா.


(தொடரும்)


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எண்ணங்களை அழகாக்கும் வண்ணங்கள்.. Paint your joy in different shades of life

news

என் பாசத்துக்குரிய அம்மாவும், மாமியாரும்.. My dear Mom & Mom in law

news

நான் கற்றுக் கொண்ட சிறந்த பாடம்.. The greatest lessons I have learnt is!

news

தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!

news

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்... 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. 4 நாட்கள் லீவு வருகிறது!

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!

news

மக்கள் சேவையே மகேசன் சேவை.. Service to Humanity!

news

மெதுவா நடக்குதா.. கவலையேபடாதீங்க.. தேங்கி நிற்காதவரை.. நகர்வது நல்லதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்