சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படவுள்ளனர்.
தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலமாகவே இப்பணிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு ஏதாவது ஒன்றைப் படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் அனுபவம் வித்தியாசப்படும், வயது வரம்பும் வித்தியாசப்படும். ஒரே ஒரு தலைமைப் பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும். ரயில்வே அல்லது மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தது 25 வருட கால அனுபவம் இருக்க வேண்டும்.

பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு குறைந்தபட்சம் 20 வருட கால அனுபவம் இருக்க வேண்டும். பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 45 ஆகும்.
மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.இ, பி,டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 38-க்குள் வயதுக்குள் இருக்க வேண்டும்.
துணை மேலாளர் பதவிக்கு 35 வயதும், உதவி மேலாளர் பணிக்கு 30 வயதும் உச்சவரம்பமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு அவசியமாகும்.
தேர்வு முறை:
தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் ஆகிய அனைத்துப் பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியுடையவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப் படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் https://chennaimetrorail.org/job-notifications/ இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க ஜூலை 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}