சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தற்போது வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வழிந்தது.பின்னர் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடகா அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை அடியோடு குறைத்து வருகிறது கர்நாடகா.

கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது தற்போது கர்நாடக அணைகளிலிருந்து வெறும் 31,000 கன அடி நீர் அளவில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் நீர் திறப்பையும் தற்போது நீர்வளத்துறை அதிகாரிகள் கணிசமாக குறைத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வினாடிக்கு 70000 கன அடியிலிருந்து தற்போது 50000 கன அடியாக குறைந்துள்ளது .16 மதகு கண் வழியாக 28,500, மின் நிலையம் வழியாக 21,500 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.630 மில்லியன் கன அடியாக உள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}