மிலாடி நபி.. 50,000 பேருக்கு மட்டன் பிரியாணி இலவசம்.. எங்கன்னு தெரியுங்களா!

Sep 28, 2023,03:25 PM IST

கோயம்புத்தூர்: மிலாடி நபியை முன்னிட்டு கோயம்புத்தூர் உக்கடம் பள்ளிவாசலில் 50 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 


பிரியாணி என்ற சொல்லை கேட்டவுடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.. அப்டியே தட்டு நிறைய ரைஸை அள்ளிப் போட்டு, நடுவுல கொஞ்சம் வாய்க்காய் வெட்டி.. அதுல கத்திரிக்காய் கூட்டை ஊத்தி.. கூடவே கொஞ்சம் ரெய்த்தாவையும் ஓரமா போட்டுக்கிட்டு.. பிரியாணிக்குள் புதைந்திருக்கும் அந்த லெக் பீஸை அப்படியே லாவகமாக உள்ளே இருந்து உருவி எடுத்து, வாயில் வச்சு ஒரு கடி கடிச்சு.. கூடவே பிரியாணியை எடுத்து வாயில் வச்சு சுவைக்கும்போது கிடைக்கும் பாருங்க ஒரு  சுகம்.. ஆஹாஹஹா.. சொர்க்கம்! 




அத்தகைய சக்தி படைத்தது தான் பிரியாணி. எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பே வராத உணவு பிரியாணி.  இன்றைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி தேடி சுவைத்து சாப்பிடுவது பிரியாணியை தான் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு பிரியாணி பைத்தியம் பிடித்தவர்கள் இந்த நாட்டில் அதிகம். புரட்டாசி மாதத்தில் கூட பிரியாணியா.. வாய்யா வாய்யா என்று வாய் நிறைய வரவேற்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம்.


அப்பேர்பட்ட பிரியாணியை தான் கோவை உக்கடத்தில் உள்ள பள்ளிவாசலில் இலவசமாக வழங்கி உள்ளனர்.  இன்று மிலாடி நபி என்பதால், இதை முன்னிட்டு, மறக்க முடியாத அளவிற்கு பிரியாணியை செய்து கொடுத்து கோவை மக்களை அசத்தியுள்ளனர்  நம் பாய்மார்கள். 50 அடுப்புகளில்  1500 கிலோ அரிசியை கொண்டு பிரியாணி தயாரித்துள்ளனர். அவ்வளவு பிரியாணியையும் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக அழகாக அதை வழங்கியுள்ளனர். 




அடிதடி, சண்டை எதுவும் இன்றி அமைதியான முறையில் வழங்கி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இப்பிரியாணியை  சாதிமதம் போதமின்றி அனைவருக்கு கிடைக்கும் விதமாக வழக்கி அசத்தினர் என்பதுதான் சூப்பர் மெசேஜ். இப்படிப்பட்ட அன்பும், பிரியமும் பந்தமும் இருக்கும் வரை எவரையும், எவரிடமிருந்தும் பிரிக்கவே முடியாது..!

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்