மிலாடி நபி.. 50,000 பேருக்கு மட்டன் பிரியாணி இலவசம்.. எங்கன்னு தெரியுங்களா!

Sep 28, 2023,03:25 PM IST

கோயம்புத்தூர்: மிலாடி நபியை முன்னிட்டு கோயம்புத்தூர் உக்கடம் பள்ளிவாசலில் 50 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 


பிரியாணி என்ற சொல்லை கேட்டவுடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.. அப்டியே தட்டு நிறைய ரைஸை அள்ளிப் போட்டு, நடுவுல கொஞ்சம் வாய்க்காய் வெட்டி.. அதுல கத்திரிக்காய் கூட்டை ஊத்தி.. கூடவே கொஞ்சம் ரெய்த்தாவையும் ஓரமா போட்டுக்கிட்டு.. பிரியாணிக்குள் புதைந்திருக்கும் அந்த லெக் பீஸை அப்படியே லாவகமாக உள்ளே இருந்து உருவி எடுத்து, வாயில் வச்சு ஒரு கடி கடிச்சு.. கூடவே பிரியாணியை எடுத்து வாயில் வச்சு சுவைக்கும்போது கிடைக்கும் பாருங்க ஒரு  சுகம்.. ஆஹாஹஹா.. சொர்க்கம்! 




அத்தகைய சக்தி படைத்தது தான் பிரியாணி. எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பே வராத உணவு பிரியாணி.  இன்றைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி தேடி சுவைத்து சாப்பிடுவது பிரியாணியை தான் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு பிரியாணி பைத்தியம் பிடித்தவர்கள் இந்த நாட்டில் அதிகம். புரட்டாசி மாதத்தில் கூட பிரியாணியா.. வாய்யா வாய்யா என்று வாய் நிறைய வரவேற்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம்.


அப்பேர்பட்ட பிரியாணியை தான் கோவை உக்கடத்தில் உள்ள பள்ளிவாசலில் இலவசமாக வழங்கி உள்ளனர்.  இன்று மிலாடி நபி என்பதால், இதை முன்னிட்டு, மறக்க முடியாத அளவிற்கு பிரியாணியை செய்து கொடுத்து கோவை மக்களை அசத்தியுள்ளனர்  நம் பாய்மார்கள். 50 அடுப்புகளில்  1500 கிலோ அரிசியை கொண்டு பிரியாணி தயாரித்துள்ளனர். அவ்வளவு பிரியாணியையும் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக அழகாக அதை வழங்கியுள்ளனர். 




அடிதடி, சண்டை எதுவும் இன்றி அமைதியான முறையில் வழங்கி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இப்பிரியாணியை  சாதிமதம் போதமின்றி அனைவருக்கு கிடைக்கும் விதமாக வழக்கி அசத்தினர் என்பதுதான் சூப்பர் மெசேஜ். இப்படிப்பட்ட அன்பும், பிரியமும் பந்தமும் இருக்கும் வரை எவரையும், எவரிடமிருந்தும் பிரிக்கவே முடியாது..!

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்