நபிகள் நாயகத்தின் பிறந்த நாள்.. தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாட்டம்

Sep 17, 2024,02:07 PM IST

சென்னை:    நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிலாடி நபி பண்டிகையை ஒட்டி,  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு  முதல்வர் மு க ஸ்டாலின்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களும் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


முகம்மது நபிகள் நாயகம்,இஸ்லாமிய நாட்காட்டியின் ரபி உல் அவல் மாதம் எனப்படும் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் பிறந்தவர். அப்போது நபிகள் நாயகம் கடைபிடித்த ஒழுக்க நெறிகளின் வழிகளிலேயே மற்றவர்களும் வாழ வேண்டும்  அறிவுறுத்தி வந்தவர்.அன்னாரின் வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்கவும், அவரை நினைவு கூறவும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபியாக கொண்டாடுகிறோம்.




அதாவது ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் மிலாடி நபி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வரிசையில் இன்று தமிழ்நாடு முழுவதும் மிலாடி நபி பண்டிகையை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை மிலாத்-உன்-நபி, மீலாதுன் நபி எனவும் வேறு பெயர்களால் அழைப்பதுண்டு. இந்த நாளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வழிபாடு செய்வர்.


ரம்ஜான், பக்ரீத் போன்றவை புனிதமான மாதமாக அனுசரிக்கப்படுவதை போன்றே மிலாடி நபியும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் நிலவட்டும் எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி  மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


அதேபோல் மிலாடி நபியாகக் கொண்டாடப்படும் முகமது நபியின் பிறந்தநாளில், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு தெரிவித்துள்ளார். 


மத நல்லிணக்கம் சமத்துவம் தழைக்க அனைவரும் இந்நாளில் உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் மு க ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இது தவிர அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களும் இஸ்லாமியர்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்