ஜம்மு காஷ்மீரில் 4.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்.. அடுத்தடுத்து 2 முறை குலுங்கிய பாரமுல்லா

Aug 20, 2024,02:07 PM IST

ஜம்மு காஷ்மீர்:   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லாவில் இன்று காலை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை, நிலச்சரிவு, நிலநடுக்கம்  உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து  ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர். ஒரு பக்கம் கனமழை மற்றொரு பக்கம் நிலநடுக்கம் என ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் எப்பொழுது எது நடக்கும் என்று தெரியாமல் இருந்து வருகின்றனர்.




ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்ல பகுதியில் அடுத்தடுத்து இன்று காலை 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. 7 நிமிட இடையில் வேளையில் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது. பாரமுல்லா பகுதியில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.4.8 ரிக்டர் அளவில் பதிவான 2வது நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


நில அதிர்வு ஏற்பட்டத்தில் வீடுகள் அதிர்ந்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தற்போது மக்கள் ரோடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்து ஏதும் நில அதிர்வு ஏற்பட்டால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்