சென்னை: லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
லியோ விவகாரம் திரையுலகை சுழற்றியடித்து வருகிறது. வேறு யாருடைய படத்துக்கும் கொடுக்காத அளவுக்கு லியோ படத்துக்கு சிக்கல்கள் வருவதாக பலரும் கருத ஆரம்பித்துள்ளனர். ஒரு சினிமா காட்சிக்காக கோர்ட் வரை சென்ற முதல் படம் லியோதான். அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி கோர்ட்டுக்குப் போனது லியோ படக் குழு.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் லியோ விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை, திரையுலகம் எங்கள் நட்பு உலகம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி தரப்படும்.
இன்றைக்கு திரையுலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசே காரணம், திரைத்துறையை முடக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை, சிறிய தயாரிப்பாளர்களை கூட இந்த அரசு ஊக்குவிக்கிறது. சினிமாவிற்கு தடை போட்டு திரையுலக விரோதப் போக்கை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
லியோ படத்திற்கு நாளொன்று 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் திரைத்துறைச் செழிப்பாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்றார் அமைச்சர் ரகுபதி.
பெட்ரோல், டீசல்,சிலிண்டர் தட்டுப்பாடு...மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை:முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!
உரிமைத்தொகை ஒருபுறம்; உயிர் அச்சம் மறுபுறம் - பெண்களைக் காக்கத் தவறிய திமுக அரசு: சீமான் ஆவேசம்!
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு...ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் மூடல்
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
என்னாது சிலிண்டர் தீந்துருச்சா.. அடுப்பில்லாத சமையல் கைவசம் இருக்கே.. வாங்க வாங்க!
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
{{comments.comment}}