காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் செல்வதை தவிர வழியில்லை : அமைச்சர் துரைமுருகன்

Aug 12, 2023,11:06 AM IST
சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்தால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்டிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகஸ்ட் 10 ம் தேதி நடைபெற காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியின் ஆலோசனை கூட்டத்திலும் தமிழகத்திற்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 22 முதல் 8000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.



இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரை முருகன், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வந்தால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் செல்வதை தவிர வேறு வழியில்லை. தங்களிடம் தண்ணீர் இல்லை என்னும் சூழ்நிலை கர்நாடகாவில் இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சொல்லும் அதிகாரம் கர்நாடகாவிற்கு கிடையாது. 

காவிரியில் வரலாறு பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் இது இன்று நேற்று நடப்பதல்ல. ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா தங்களின் நிலையில் பிடிவாதமாக இருப்பது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்