காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் செல்வதை தவிர வழியில்லை : அமைச்சர் துரைமுருகன்

Aug 12, 2023,11:06 AM IST
சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்தால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்டிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகஸ்ட் 10 ம் தேதி நடைபெற காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியின் ஆலோசனை கூட்டத்திலும் தமிழகத்திற்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 22 முதல் 8000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.



இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரை முருகன், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வந்தால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் செல்வதை தவிர வேறு வழியில்லை. தங்களிடம் தண்ணீர் இல்லை என்னும் சூழ்நிலை கர்நாடகாவில் இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சொல்லும் அதிகாரம் கர்நாடகாவிற்கு கிடையாது. 

காவிரியில் வரலாறு பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் இது இன்று நேற்று நடப்பதல்ல. ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா தங்களின் நிலையில் பிடிவாதமாக இருப்பது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்