சென்னை: பாஜகவோடு கள்ளக்கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபத்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி என்றால் பயம், உள்துறை அமைச்சர் அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை பயம், சிபிஐ பயம் என அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு கண்டனம் என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்துதல் என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித் ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித்துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய் விடுமோ என்று பயம் இப்படி எடப்பாடி பழனிசாமியின் பயப்பட்டியலில் எல்லாம் பயம் மயம் எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.
- நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.
- ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்,உதய் மின் திட்டத்திற்கெல்லாம் மோடிக்கு பயந்து ஆதரவு.
* முத்தலாக் தடைச் சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது.
- முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அமலாக்க அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை 2024ல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்து கையெழுத்திட மறுத்தது.
- நாடு விடுதலை அடைந்த நாளிலிருந்து வழிகாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டு இருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.
- நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது. இது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷ வாயு நீங்கள்.
- மாநிலங்களின் சுய ஆட்சிக்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக.
இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழை தான் எடப்பாடி பழனிச்சாமி. இவர்தான் அதிமுக பொதுக்குழுவின் வீரவேசமாக பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார். பெட்ரோல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிச்சாமி அறிக்கை விட்டு இருக்கிறாரா? அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026 அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன? என்று தான் கேட்கத் தோன்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}