டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 34 தலித் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் சரி, ராகுல் காந்தியும் சரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் . முருகன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளரிடம் எல். முருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கிட்டத்தட்ட 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேர் தலித்துகள். ஆனால் அரசியல் சாசனம் குறித்து வாய் கிழியப் பேசும் மல்லிகார்ஜூன கார்கேவோ அல்லது ராகுல் காந்தியோ அல்லது இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களோ எதுவுமே பேசாமல் மெளனமாக உள்ளனர்.

யாருமே வாய் திறக்கவில்லை. இந்தியா கூட்டணியின் இந்த அமைதிப் போக்கு கண்டனத்துக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்குப் போகவில்லை. சம்பவம் நடந்து 3 நாட்களாகி விட்டது. இன்னும் போகாமல் இருக்கிறார். அவர் அங்கு போக வேண்டும்.
இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவது நியாயமானது. சிபிஐ விசாரித்தால்தான் உண்மை நிலை என்னவென்று தெரிய வரும் என்று கூறினார் எல். முருகன்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}