டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 34 தலித் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் சரி, ராகுல் காந்தியும் சரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் . முருகன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளரிடம் எல். முருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கிட்டத்தட்ட 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேர் தலித்துகள். ஆனால் அரசியல் சாசனம் குறித்து வாய் கிழியப் பேசும் மல்லிகார்ஜூன கார்கேவோ அல்லது ராகுல் காந்தியோ அல்லது இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களோ எதுவுமே பேசாமல் மெளனமாக உள்ளனர்.
யாருமே வாய் திறக்கவில்லை. இந்தியா கூட்டணியின் இந்த அமைதிப் போக்கு கண்டனத்துக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்குப் போகவில்லை. சம்பவம் நடந்து 3 நாட்களாகி விட்டது. இன்னும் போகாமல் இருக்கிறார். அவர் அங்கு போக வேண்டும்.
இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவது நியாயமானது. சிபிஐ விசாரித்தால்தான் உண்மை நிலை என்னவென்று தெரிய வரும் என்று கூறினார் எல். முருகன்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}