டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 34 தலித் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் சரி, ராகுல் காந்தியும் சரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் . முருகன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளரிடம் எல். முருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கிட்டத்தட்ட 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேர் தலித்துகள். ஆனால் அரசியல் சாசனம் குறித்து வாய் கிழியப் பேசும் மல்லிகார்ஜூன கார்கேவோ அல்லது ராகுல் காந்தியோ அல்லது இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களோ எதுவுமே பேசாமல் மெளனமாக உள்ளனர்.

யாருமே வாய் திறக்கவில்லை. இந்தியா கூட்டணியின் இந்த அமைதிப் போக்கு கண்டனத்துக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்குப் போகவில்லை. சம்பவம் நடந்து 3 நாட்களாகி விட்டது. இன்னும் போகாமல் இருக்கிறார். அவர் அங்கு போக வேண்டும்.
இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவது நியாயமானது. சிபிஐ விசாரித்தால்தான் உண்மை நிலை என்னவென்று தெரிய வரும் என்று கூறினார் எல். முருகன்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}