சென்னை: கோவிஷீல்ட் குறித்து தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் மக்களுக்காக நீர் மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோவிஷீல்ட் பக்கவிளைவுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கோவிஷீல்ட் மட்டுமல்லாமல் அனைத்துத் தடுப்பூசிகள் குறித்தும் மக்கள் அச்சத்தோடேயே வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் கோவிஷீல்ட் தொடர்பான தீவிர பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை, அப்படி தகவல் இல்லை.
பொதுவாகவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதைப் போட்டுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே பின்விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் இங்கு இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பாதுகாத்துக் கொண்டாலே போதுமானது.
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், காலையில் நடக்க வேண்டும். நல்ல சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். அப்படி செய்து வந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம் என்றார் மா.சுப்பிரமணியன்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் என இரு தடுப்பூசிகள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}