சென்னை: கோவிஷீல்ட் குறித்து தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் மக்களுக்காக நீர் மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோவிஷீல்ட் பக்கவிளைவுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கோவிஷீல்ட் மட்டுமல்லாமல் அனைத்துத் தடுப்பூசிகள் குறித்தும் மக்கள் அச்சத்தோடேயே வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் கோவிஷீல்ட் தொடர்பான தீவிர பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை, அப்படி தகவல் இல்லை.
பொதுவாகவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதைப் போட்டுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே பின்விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் இங்கு இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பாதுகாத்துக் கொண்டாலே போதுமானது.
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், காலையில் நடக்க வேண்டும். நல்ல சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். அப்படி செய்து வந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம் என்றார் மா.சுப்பிரமணியன்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் என இரு தடுப்பூசிகள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}