சென்னை: கோவிஷீல்ட் குறித்து தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் மக்களுக்காக நீர் மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோவிஷீல்ட் பக்கவிளைவுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கோவிஷீல்ட் மட்டுமல்லாமல் அனைத்துத் தடுப்பூசிகள் குறித்தும் மக்கள் அச்சத்தோடேயே வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் கோவிஷீல்ட் தொடர்பான தீவிர பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை, அப்படி தகவல் இல்லை.
பொதுவாகவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதைப் போட்டுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே பின்விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் இங்கு இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பாதுகாத்துக் கொண்டாலே போதுமானது.
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், காலையில் நடக்க வேண்டும். நல்ல சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். அப்படி செய்து வந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம் என்றார் மா.சுப்பிரமணியன்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் என இரு தடுப்பூசிகள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}