தமிழ்நாட்டில்.. ஆவின் பால் விற்பனை 23% அதிகரிப்பு.. அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

Jun 19, 2024,04:03 PM IST

சென்னை: கடந்தாண்டை விட ஆவின் பால் விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் பால் கொள்முதலை விட கூட்டுறவு மூலம் அதிக விலைக்கு ஆவின் கொள்முதல் செய்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ஆவின் நிர்வாகம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் பால் கொள்முதலில்  புதிய இலக்கை எட்டவுள்ளோம். ஆவின் பொருட்களை  கூட்டுறவு துறையுடன் இணைந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த ஆண்டை விட பால் விற்பனை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தாண்டில் அது மேலும் அதிகரிக்கும்.




தனியார் பால் கொள்முதலை விட கூட்டுறவு மூலம் விலைக்கு ஆவின் கொள்முதல் செய்கிறது.தனியார் பால் நிறுவனங்கள் விலையை குறைத்ததால் அது ஆவின் பால் விற்பனையை பாதிக்காது. புதிய கால்நடைகள் வாங்க விவசாயிகள் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம். ஆவினில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.


இந்தாண்டு விவசாயிகளை மையப்படுத்திய ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயி்ற்சி கொடுத்தில், செயல்முறை விளக்கம் அளித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த காலத்தை ஒப்பிடும் போது தற்போது பால் வளத்தில் ஒரு முன்னேற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


நம்முடைய மக்கள் தொகை, நமக்கான தேவைகள், மக்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப இன்னும் நாம் வளர வேண்டும். வரும் காலத்தில் நம்முடைய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பொதுமக்கள்  ஆவினை நம்புகிறார்கள், ஆவினை விரும்புகிறார்கள். ஆவின் விலை மற்ற விலையை விட குறைவு. தற்போது வரை 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலில் இது 40 லட்சம் லிட்டராக உயரும் வாய்ப்பு உள்ளது. அதற்கான பணிகளை தற்போது செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்