உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்

Dec 03, 2024,05:49 PM IST

சென்னை: உண்மையிலேயே எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி வாய்ச்சவடால் விடாமல் மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி தரட்டும். உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வீசி இருக்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 


சென்னையில் கடந்த காலங்களில் 13 சென்டிமீட்டர் மழைக்கே மூன்று நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்த 12 மணி நேரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கு, தமிழக முதலமைச்சரின் போர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஃபெஞ்சல் புயல் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




தமிழக அரசு மீது எதிர் கட்சிகள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு கொடுத்து படிப்படியாக தான் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து முன்கூட்டிய தண்ணீர் திறக்கப்பட்டதால்  பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் மனசாட்சியோடு பேச வேண்டும்.


உண்மையிலேயே எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி வாய்ச்சவடால் விடாமல் மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி தரட்டும். உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வீசி இருக்கிறார்கள். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். புயலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் அளவிட முடியாத சூழல் இருந்தது.


புயல் போக்கு காட்டியது என்பது உண்மை தான். புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல் தான் இருந்துள்ளது. எனினும் அரசு தயார் நிலையில் இருந்ததால் தான் பெரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்ததால் இரண்டு நாட்கள் சரி செய்யப்படும். திருவண்ணாமலையில்  பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்படும். 40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத்திருவிழாவை நடத்துவோம். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வருங்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்