கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!

May 20, 2025,06:49 PM IST
சென்னை: கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி. அதற்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பெள்ளாச்சி சம்பவம் குறித்து ஒரு அறிக்கை வெயிட்டிருந்தார். அந்த அறிக்கையில்,  பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று மேடைதோறும் கூவிய முக ஸ்டாலின் அவர்களே- உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி தானே? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், துப்பு கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியை சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும் சொல்லி இருக்கிறோம். ஆட்சியைப் பொருத்தவரை தவறு நடக்கும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம் சாட்ட வேண்டும்.



 முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. தவறு யார் இழைத்திருந்தாலும், சொந்த கட்சிக்காரரே தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு. இது நீதியின் சாட்சி. சட்டத்தின் ஆட்சி. கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி, அதற்கு சாத்தான் குளம் சம்பவமே சாட்சி என்று பதில் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் சேகர்பாபு ஆகிய 3வருக்கும் இடையில், தற்போது வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்

news

Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா

news

C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!

news

பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?

news

போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!

news

பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்