கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!

May 20, 2025,06:49 PM IST
சென்னை: கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி. அதற்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பெள்ளாச்சி சம்பவம் குறித்து ஒரு அறிக்கை வெயிட்டிருந்தார். அந்த அறிக்கையில்,  பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று மேடைதோறும் கூவிய முக ஸ்டாலின் அவர்களே- உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி தானே? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், துப்பு கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியை சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும் சொல்லி இருக்கிறோம். ஆட்சியைப் பொருத்தவரை தவறு நடக்கும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம் சாட்ட வேண்டும்.



 முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. தவறு யார் இழைத்திருந்தாலும், சொந்த கட்சிக்காரரே தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு. இது நீதியின் சாட்சி. சட்டத்தின் ஆட்சி. கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி, அதற்கு சாத்தான் குளம் சம்பவமே சாட்சி என்று பதில் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் சேகர்பாபு ஆகிய 3வருக்கும் இடையில், தற்போது வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி

news

கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்

news

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!

news

தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!

news

சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்

news

கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்