இலாகா இல்லாமல் பதவியில் நீடித்து வந்த.. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா

Feb 12, 2024,09:33 PM IST

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக கடந்த 8 மாதங்களாக நீடித்து வந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை.




அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் ஆர். என்.ரவி அதிரடியாக நீக்கி நாட்டையே அதிர வைத்தார். ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால் தனது முடிவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.


கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவதாலும், இலாகா இல்லாத அமைச்சராக நீண்டகாலமாக நீடித்தால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் இதை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரச்சினை செய்து விடக் கூடாது என்பதாலும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இதை விட முக்கியமாக, அமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை ஜாமீன் கிடைக்காது என்று சட்ட நிபுணர்கள் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது  ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதால்தான் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால், கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை அவர் நேரில் முடுக்கி விட வாய்ப்பு இருக்கும் என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. அது கொங்கு மண்டல திமுகவினருக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்