சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக கடந்த 8 மாதங்களாக நீடித்து வந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை.
அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் ஆர். என்.ரவி அதிரடியாக நீக்கி நாட்டையே அதிர வைத்தார். ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால் தனது முடிவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.
கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவதாலும், இலாகா இல்லாத அமைச்சராக நீண்டகாலமாக நீடித்தால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் இதை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரச்சினை செய்து விடக் கூடாது என்பதாலும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதை விட முக்கியமாக, அமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை ஜாமீன் கிடைக்காது என்று சட்ட நிபுணர்கள் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதால்தான் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால், கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை அவர் நேரில் முடுக்கி விட வாய்ப்பு இருக்கும் என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. அது கொங்கு மண்டல திமுகவினருக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}