சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக கடந்த 8 மாதங்களாக நீடித்து வந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை.

அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் ஆர். என்.ரவி அதிரடியாக நீக்கி நாட்டையே அதிர வைத்தார். ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால் தனது முடிவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.
கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவதாலும், இலாகா இல்லாத அமைச்சராக நீண்டகாலமாக நீடித்தால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் இதை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரச்சினை செய்து விடக் கூடாது என்பதாலும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதை விட முக்கியமாக, அமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை ஜாமீன் கிடைக்காது என்று சட்ட நிபுணர்கள் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதால்தான் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால், கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை அவர் நேரில் முடுக்கி விட வாய்ப்பு இருக்கும் என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. அது கொங்கு மண்டல திமுகவினருக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}