அன்னா ஹசாரே போல.. உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்?.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு கேள்வி

Jan 21, 2025,07:06 PM IST

சென்னை: அண்ணா ஹசாரே போல ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை ஓட்டேரியில் மக்களைத் தேடி பயணம் திட்டத்தின் மூலம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வட சென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் படி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது. திருச்செந்தூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் ரூ.400 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.




40 தொகுதிகளிலும் நின்று வென்று காட்டியவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நம் முதல்வர். 2026ல் மக்கள் சம்மட்டி அடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இது திராவிட மண். இனத்தால், மொழியால், மதத்தால் பிளவுகள் ஏற்படுத்தி குளிர்காய்கிறவர்களுக்கு இரும்பு நாயகனாக இருக்கிறார் எங்கள் நாயகன். எங்கள் முதல்வர் இருக்கின்ற வரையில் இது போன்ற பொய்ப்பிரச்சாரங்கள் எடுபடாது.


அன்னா ஹசாரே மாதிரி ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார். நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் சூரியன் உதிக்கும் முன் மக்கள் பணிக்கு வந்துள்ளோம் இரவு வரை இதனை மேற்கொள்கிறோம். இது தான் திமுகவின் நிலை என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்