சென்னை: அண்ணா ஹசாரே போல ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் மக்களைத் தேடி பயணம் திட்டத்தின் மூலம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வட சென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் படி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது. திருச்செந்தூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் ரூ.400 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளிலும் நின்று வென்று காட்டியவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நம் முதல்வர். 2026ல் மக்கள் சம்மட்டி அடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இது திராவிட மண். இனத்தால், மொழியால், மதத்தால் பிளவுகள் ஏற்படுத்தி குளிர்காய்கிறவர்களுக்கு இரும்பு நாயகனாக இருக்கிறார் எங்கள் நாயகன். எங்கள் முதல்வர் இருக்கின்ற வரையில் இது போன்ற பொய்ப்பிரச்சாரங்கள் எடுபடாது.
அன்னா ஹசாரே மாதிரி ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார். நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் சூரியன் உதிக்கும் முன் மக்கள் பணிக்கு வந்துள்ளோம் இரவு வரை இதனை மேற்கொள்கிறோம். இது தான் திமுகவின் நிலை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தமிழ்நாடு - புதுச்சேரியில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்; புதுவையில் வேட்புமனு தாக்கல் துவக்கம்
முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்
தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு
{{comments.comment}}