சென்னை: அண்ணா ஹசாரே போல ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் மக்களைத் தேடி பயணம் திட்டத்தின் மூலம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வட சென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் படி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது. திருச்செந்தூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் ரூ.400 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளிலும் நின்று வென்று காட்டியவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நம் முதல்வர். 2026ல் மக்கள் சம்மட்டி அடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இது திராவிட மண். இனத்தால், மொழியால், மதத்தால் பிளவுகள் ஏற்படுத்தி குளிர்காய்கிறவர்களுக்கு இரும்பு நாயகனாக இருக்கிறார் எங்கள் நாயகன். எங்கள் முதல்வர் இருக்கின்ற வரையில் இது போன்ற பொய்ப்பிரச்சாரங்கள் எடுபடாது.
அன்னா ஹசாரே மாதிரி ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார். நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் சூரியன் உதிக்கும் முன் மக்கள் பணிக்கு வந்துள்ளோம் இரவு வரை இதனை மேற்கொள்கிறோம். இது தான் திமுகவின் நிலை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
சித்தத்தை சிவமயம் ஆக்கும்.. பித்தத்தை தெளிவாக சிவமாக்கும்!
ஆசை
கனவு மெய்ப்பட வேண்டும்!
"அர்ஜுன் சொன்னது பாதி உண்மைதான்".. (நீ மழை.. 3)
சென்னைஒன் செயலி தொழில்நுட்பக் கோளாறு சரியானது.. எம்டிசி நிறுவனம் அறிவிப்பு
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
{{comments.comment}}