சென்னை: அண்ணா ஹசாரே போல ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் மக்களைத் தேடி பயணம் திட்டத்தின் மூலம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வட சென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் படி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது. திருச்செந்தூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் ரூ.400 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
40 தொகுதிகளிலும் நின்று வென்று காட்டியவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நம் முதல்வர். 2026ல் மக்கள் சம்மட்டி அடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இது திராவிட மண். இனத்தால், மொழியால், மதத்தால் பிளவுகள் ஏற்படுத்தி குளிர்காய்கிறவர்களுக்கு இரும்பு நாயகனாக இருக்கிறார் எங்கள் நாயகன். எங்கள் முதல்வர் இருக்கின்ற வரையில் இது போன்ற பொய்ப்பிரச்சாரங்கள் எடுபடாது.
அன்னா ஹசாரே மாதிரி ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார். நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் சூரியன் உதிக்கும் முன் மக்கள் பணிக்கு வந்துள்ளோம் இரவு வரை இதனை மேற்கொள்கிறோம். இது தான் திமுகவின் நிலை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ப வடிவில் பிள்ளைகளை உட்கார வைத்தால்.. கழுத்து வலிக்காதா.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
ப வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வைக்கும் கோரிக்கை!
ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு
விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!
சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!
ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து
{{comments.comment}}