பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம் செய்யலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனியில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த வருடம் தைப்பூச திருவிழாவிற்காக வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெற இருக்கிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள். தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினந்தோரும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை ஆக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரிலும், விநாயகர் சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. தை பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தைப்பூச தினம், அதற்கு முந்தைய நாள் மற்றும் தைப்பூச தினத்திற்கு அடுத்த நாள் என பிப்ரவரி 10,11,12 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்ல சாமி தரிசனம் நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திருவிழாவிற்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}