பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம் செய்யலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனியில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த வருடம் தைப்பூச திருவிழாவிற்காக வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெற இருக்கிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள். தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினந்தோரும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை ஆக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரிலும், விநாயகர் சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. தை பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தைப்பூச தினம், அதற்கு முந்தைய நாள் மற்றும் தைப்பூச தினத்திற்கு அடுத்த நாள் என பிப்ரவரி 10,11,12 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்ல சாமி தரிசனம் நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திருவிழாவிற்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}