பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம் செய்யலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனியில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த வருடம் தைப்பூச திருவிழாவிற்காக வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெற இருக்கிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள். தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினந்தோரும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை ஆக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரிலும், விநாயகர் சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. தை பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தைப்பூச தினம், அதற்கு முந்தைய நாள் மற்றும் தைப்பூச தினத்திற்கு அடுத்த நாள் என பிப்ரவரி 10,11,12 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்ல சாமி தரிசனம் நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திருவிழாவிற்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!
Heat Wave warning: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி...இணையத்தைக் கலக்கும் அதிரடித் தகவல்!
பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!
தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!
{{comments.comment}}