பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம் செய்யலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனியில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த வருடம் தைப்பூச திருவிழாவிற்காக வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெற இருக்கிறது.
இத்திருவிழாவை காண தமிழகம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள். தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினந்தோரும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை ஆக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரிலும், விநாயகர் சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. தை பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தைப்பூச தினம், அதற்கு முந்தைய நாள் மற்றும் தைப்பூச தினத்திற்கு அடுத்த நாள் என பிப்ரவரி 10,11,12 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்ல சாமி தரிசனம் நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திருவிழாவிற்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}