"இந்தாங்க பிடிங்க.. கட்டடத்தை முடிங்க".. நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

Feb 15, 2024,05:09 PM IST

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலின் போது பிரம்மாண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அப்போது, விஷால் ஒரு படி மேலே  போய் அந்த மண்டபத்தில் தான் எனக்கு திருமணம் என்றார். இதன்படி, நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 2017ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று செங்கல் எடுத்து வைத்தனர். 


தென்னிந்தி நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராய நகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கட்டிடம் கட்டு பணி நடைபெற்று வந்தது. ஐந்து வருடம் கடந்துவிட்ட நிலையில்  திடீரென நிதி நெருக்கடி காரணமாக கட்டடப்பணி நிறுத்தப்பட்டது.  கட்டிடப்பணி மீண்டும் தொடங்க வேண்டும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நிதி திரட்டி வந்தனர். 




இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், விஷால், கார்த்தி மற்றும்  கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் காசோலையை வழங்கினார். இதற்கு நடிகர் விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்