சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலின் போது பிரம்மாண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அப்போது, விஷால் ஒரு படி மேலே போய் அந்த மண்டபத்தில் தான் எனக்கு திருமணம் என்றார். இதன்படி, நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 2017ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று செங்கல் எடுத்து வைத்தனர்.
தென்னிந்தி நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராய நகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கட்டிடம் கட்டு பணி நடைபெற்று வந்தது. ஐந்து வருடம் கடந்துவிட்ட நிலையில் திடீரென நிதி நெருக்கடி காரணமாக கட்டடப்பணி நிறுத்தப்பட்டது. கட்டிடப்பணி மீண்டும் தொடங்க வேண்டும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நிதி திரட்டி வந்தனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் காசோலையை வழங்கினார். இதற்கு நடிகர் விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}