டெல்லி: முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா அழகியான ரிங்கி சக்மா புற்றுநோய்க்கு பலியாகியுள்ளார். 2 வருடமாக போராடி வந்த அவரது வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு 28 வயதுதான் ஆகிறது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்தும் கூட அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2 வருடமாகவே தொடர் சிகிச்சை எடுத்துப் போராடிக் கொண்டிருந்தார் ரிங்கி சக்மா.
கடந்த மாதம்தான் தனது துயரமிகு போராட்டம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருந்தார் ரிங்கி. நான் தனித்துப் போராடிக் கொண்டிருக்ககிறேன். எனது உடல் நிலை குறித்து யாரிடமும் சொல்ல நான் விரும்பியதில்லை. நானே போராடி சரி செய்து கொள்வேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

ரிங்கிக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருந்தது. இதற்காக அவர் அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் மேற்கொண்டிருந்தார். அவரது நுரையீரலைத் தாக்கிய புற்றுநோய் பின்னர் அவரது மூளை வரை போய் விட்டது. மூளையில் கட்டி உருவாகியிருந்தது தெரிய வந்தது. தனது கண் வரை பாதிப்பு இருப்பதாகவும், இதிலிருந்து மீளும் வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருந்தார் ரிங்கி சக்மா.
கீமோதெரபி தொடர்வதாகவும், விரைவில் மூளை அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தனது சேமிப்பு அனைத்தும் சிகிச்சைக்காக செலவழிந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
2017ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பியூட்டி வித் ஏ பர்பஸ் என்ற பட்டத்தை வென்றவர் ரிங்கி சக்மா. அந்தப் போட்டியில் மனுஷி சில்லார் அழகிப் பட்டம் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}