டெல்லி: முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா அழகியான ரிங்கி சக்மா புற்றுநோய்க்கு பலியாகியுள்ளார். 2 வருடமாக போராடி வந்த அவரது வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு 28 வயதுதான் ஆகிறது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்தும் கூட அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2 வருடமாகவே தொடர் சிகிச்சை எடுத்துப் போராடிக் கொண்டிருந்தார் ரிங்கி சக்மா.
கடந்த மாதம்தான் தனது துயரமிகு போராட்டம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருந்தார் ரிங்கி. நான் தனித்துப் போராடிக் கொண்டிருக்ககிறேன். எனது உடல் நிலை குறித்து யாரிடமும் சொல்ல நான் விரும்பியதில்லை. நானே போராடி சரி செய்து கொள்வேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

ரிங்கிக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருந்தது. இதற்காக அவர் அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் மேற்கொண்டிருந்தார். அவரது நுரையீரலைத் தாக்கிய புற்றுநோய் பின்னர் அவரது மூளை வரை போய் விட்டது. மூளையில் கட்டி உருவாகியிருந்தது தெரிய வந்தது. தனது கண் வரை பாதிப்பு இருப்பதாகவும், இதிலிருந்து மீளும் வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருந்தார் ரிங்கி சக்மா.
கீமோதெரபி தொடர்வதாகவும், விரைவில் மூளை அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தனது சேமிப்பு அனைத்தும் சிகிச்சைக்காக செலவழிந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
2017ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பியூட்டி வித் ஏ பர்பஸ் என்ற பட்டத்தை வென்றவர் ரிங்கி சக்மா. அந்தப் போட்டியில் மனுஷி சில்லார் அழகிப் பட்டம் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}