டெல்லி: முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா அழகியான ரிங்கி சக்மா புற்றுநோய்க்கு பலியாகியுள்ளார். 2 வருடமாக போராடி வந்த அவரது வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு 28 வயதுதான் ஆகிறது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்தும் கூட அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2 வருடமாகவே தொடர் சிகிச்சை எடுத்துப் போராடிக் கொண்டிருந்தார் ரிங்கி சக்மா.
கடந்த மாதம்தான் தனது துயரமிகு போராட்டம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருந்தார் ரிங்கி. நான் தனித்துப் போராடிக் கொண்டிருக்ககிறேன். எனது உடல் நிலை குறித்து யாரிடமும் சொல்ல நான் விரும்பியதில்லை. நானே போராடி சரி செய்து கொள்வேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது என்று அவர் கூறியிருந்தார்.
ரிங்கிக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருந்தது. இதற்காக அவர் அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் மேற்கொண்டிருந்தார். அவரது நுரையீரலைத் தாக்கிய புற்றுநோய் பின்னர் அவரது மூளை வரை போய் விட்டது. மூளையில் கட்டி உருவாகியிருந்தது தெரிய வந்தது. தனது கண் வரை பாதிப்பு இருப்பதாகவும், இதிலிருந்து மீளும் வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருந்தார் ரிங்கி சக்மா.
கீமோதெரபி தொடர்வதாகவும், விரைவில் மூளை அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தனது சேமிப்பு அனைத்தும் சிகிச்சைக்காக செலவழிந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
2017ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பியூட்டி வித் ஏ பர்பஸ் என்ற பட்டத்தை வென்றவர் ரிங்கி சக்மா. அந்தப் போட்டியில் மனுஷி சில்லார் அழகிப் பட்டம் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}